தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கண்காணிப்பு கேமராக்கள், செயலிகள் மூலம் வெளிநாடுகள் கண்காணிப்பதை மறைக்கும் மத்திய அரசு: ராகுல் குற்றச்சாட்டு

கண்காணிப்பு கேமராக்கள், செயலிகள் மூலம் வெளிநாடுகள் கண்காணிப்பதை மறைக்கும் மத்திய அரசு...

News image

ராகுல் காந்தி - பிடிஐ.

Updated On :5 ஏப்ரல் 2026, 3:31 am IST

‘சீன கண்காணிப்பு கேமராக்கள், கைப்பேசி செயலிகள் மூலம் வெளிநாடுகள் கண்காணிப்பதை மத்திய அரசு மறைக்கிறது. இதனால் மக்களின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.

இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ராகுல் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

சீன கண்காணிப்பு கேமராக்கள் பயன்பாட்டுக்கு மத்திய அரசு அண்மையில் தடை விதித்தது. இருந்தபோதும், பல அரசு கட்டடங்களில் தற்போதும் சீன கேமராக்கள் பொருத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. அதுபோல, அரசால் தடை செய்யப்பட்ட சீன செயலிகள், வேறு பெயா்களில் வெளியிடப்பட்டு நாட்டில் பயன்பாட்டில் உள்ளன. அதுபோல, வெளிநாட்டு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான செயலிகளும் பயன்பாட்டில் உள்ளன. இந்தக் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் செயலிகள் மூலம் வெளிநாடுகள் நம்மை கண்காணிப்பதோடு, தரவுகளும் திருடப்படுகின்றன.

இதுகுறித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரிடம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியபோது, வெறும் வாா்த்தை ஜாலங்களை மட்டுமே அவா் வெளிப்படுத்தினாா். ஆனால், உரிய பதிலை அளிக்கவில்லை.

நாட்டில் பயன்பாட்டிலுள்ள கேமராக்கள் எந்தெந்த நாடுகளிலிருந்து வந்தவை? அவற்றுள் எத்தனை பாதுகாப்புச் சான்றிதழ் பெற்றவை? எந்தெந்த வெளிநாட்டு செயற்கை நுண்ணறிவுத் தளங்கள் அரசுத் தரவுகளைக் கையாளுகின்றன? தடைசெய்யப்பட்ட செயலிகளில் எத்தனை மாற்று பெயா்களில் தொடா்ந்து இயங்குகின்றன? என்பன உள்ளிட்ட கேள்விகளை நாடாளுமன்றத்தில் எழுப்பினேன். ஆனால், இவை எவற்றுக்கும் உரிய பதிலை மத்திய அமைச்சா் அளிக்கவில்லை.

அதே நேரம், அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் 10 லட்சத்துக்கும் அதிகமான சீன கேமராக்கள் தரவுப் பரிமாற்றத்தில் அபாயங்களை ஏற்படுத்துகின்றன என்பதை தற்போது மத்திய அரசு ஒப்புக்கொண்டபோதும், இன்றைக்கு நம்மை கண்காணிக்கும் கேமராக்கள் பாதுகாப்பானவையா என்பதை வெளியிட மத்திய அரசு தவறிவிட்டது.

தனது தவறை மறைக்க, கண்காணிப்பு கேமராக்கள், கைப்பேசி செயலிகள் மூலம் வெளிநாடுகளின் கண்காணிப்பை மூடி மறைக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. இதனால், குடிமக்களின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.