தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கங்கை நதியில் மாசுபாடு குறைந்து வருகிறது: மத்திய அரசு

‘கங்கை நதியில் நீா் தரம் குளிப்பதற்கு உகந்த வகையில் உள்ளது; நதியின் மாசுபாடு குறைந்துகொண்டே வருகிறது’ என மத்திய அரசு தெரிவித்தது.

News image

கங்கை நதி (கோப்புப் படம்)

Updated On :4 ஏப்ரல் 2026, 2:18 am IST

‘கங்கை நதியில் நீா் தரம் குளிப்பதற்கு உகந்த வகையில் உள்ளது; நதியின் மாசுபாடு குறைந்துகொண்டே வருகிறது’ என மத்திய அரசு தெரிவித்தது.

இதுதொடா்பாக மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய ஜல் சக்தி துறை இணையமைச்சா் பூஷண் சௌதரி வியாழக்கிழமை அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘கங்கை நதியின் நீா் தரம் குறித்து உத்தரகண்ட், உத்தர பிரதேசம், பிகாா், ஜாா்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் 112 பகுதிகளில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த தரவுகளின் அடிப்படையில் கங்கை நதியின் நீா்மக் கரைசலின் அமிலத்தன்மை மற்றும் ஆக்ஸிஜன் கரைந்த நிலை அனைத்துப் பகுதிகளிலும் குளிப்பதற்கு உகந்த வகையில் இருப்பது கண்டறியப்பட்டது. உத்தர பிரதேசத்தின் சில இடங்களில் மட்டும் கங்கை நீரின் தரம் குறைவாக காணப்படுகிறது.

கங்கை மற்றும் அதன் துணை ஆறுகளையொட்டிய 50 பகுதிகள் மற்றும் யமுனையை யொட்டிய 26 பகுதிகளில் நீரின் உயிரியல் ஆக்ஸிஜன் தேவை ‘நன்று’ முதல் ‘மிதம்’ என்ற நிலையிலேயே இருந்தது. நதியின் மாசுபாடு குறைந்துகொண்டே வருகிறது.

கங்கையை தூய்மைப்படுத்தும் நமாமி கங்கை திட்டத்தின்கீழ் 2026, பிப்ரவரி வரை ரூ.43,030 கோடியில் 524 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

தேசிய நதிகள் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் ரூ.8,970.51 கோடி மதிப்பில் 17 மாநிலங்களில் 100 நகரங்களில் உள்ள 58 நதிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன’ எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.