இந்தியாவில் திருமணம் மீறிய உறவுகள் கணிசமாக அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், டேட்டிங் செயலிகளின் பயன்பாடு அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. அதிலும் திருமணம் மீறிய உறவுகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக ஆய்வு கூறுகிறது.
சமீபத்திய ஆய்வுகளின்படி, டேட்டிங் செயலிகளை சுமார் 40 லட்சம் பேர் பயன்படுத்துவதாகக் கூறுகிறது. அவர்களில் 65 சதவிகிதம் ஆண்களும், 35 சதவிகிதம் பெண்களும் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் திருமணமானவர்களே. மேலும், பெண்களின் பங்களிப்பு, கடந்த 2 ஆண்டுகளில் கணிசமாக 148 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
சராசரியாக டேட்டிங் செயலிகளில் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் முதல் 1.5 மணிநேரம் வரையில் பயனர்கள் அரட்டையடிக்கின்றனர். குறிப்பாக, மதியம் 12 மணிமுதல் 3 மணிவரையிலும், இரவு 10 மணிமுதல் நள்ளிரவு வரையிலும் செயலியின் பயன்பாடு உச்சத்தை அடைவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் ஆண்கள் - 25 முதல் 30 வயதுடைய பெண்களை நாட முயல்வதாகவும், பெண்கள் - 30 முதல் 40 வயதுக்குள்பட்ட ஆண்களை (குறிப்பாக மருத்துவர்கள், பட்டயக் கணக்காளர்கள் போன்ற பொருளாதார ரீதியாக தொழில் வல்லுநர்கள்) விரும்புகிறார்கள்.
டேட்டிங் செயலி பயன்பாட்டில் 18 சதவிகித பயனர்களுடன் பெங்களூரு முதலிடமும், 17 சதவிகித பயனர்களுடன் ஹைதராபாத் இரண்டாமிடமும், தில்லியில் 11 சதவிகிதமும், மும்பையில் 9 சதவிகிதமும், புணேயில் 7 சதவிகிதமும் உள்ளதாகக் குறிப்பிடுகின்றனர்.
கடந்தாண்டு ஜூன் மாதத்தின் தரவுகளின்படி, திருமணம் மீறிய உறவுகள் இருந்தோரில் தமிழகத்தின் காஞ்சிபுரத்திலும் அதிகளவில் இருந்ததாக ஆய்வுகள் கூறின.
Summary
Four million Indians on this extramarital dating app
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லியில் போலி வர்த்தக செயலி மூலம் ரூ. 45 லட்சம் மோசடி! வங்கி உதவி மேலாளர் உள்பட 3 பேர் கைது!
சம்பளத்தை உயர்த்திய சிவகார்த்திகேயன்?

2025-26 நிதியாண்டில் மாருதி சுஸுகி 23.4 லட்சம் காா்கள் தயாரிப்பு
டேட்டிங் செயலி மூலம் ஆசை காட்டி ஏமாற்றி இளைஞரைக் கடத்தி கொள்ளை: ஐவா் கைது
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

