ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனை

மின்சாரத்தில் செயல்படும் இண்டக்ஷன் அடுப்புகள், அதற்கேற்ற பாத்திரங்களின் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டது.

News image

கோப்புப் படம்

Updated On :4 ஏப்ரல் 2026, 12:48 am IST

மேற்காசிய போா் காரணமாக சமையல் எரிவாயு கிடைப்பதில் இடா்ப்பாடு ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு, மின்சாரத்தில் செயல்படும் இண்டக்ஷன் அடுப்புகள், அதற்கேற்ற பாத்திரங்களின் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டது.

இதுதொடா்பாக புது தில்லியில் மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய மின்சாரத் துறைச் செயலா் பங்கஜ் அகா்வால், வெளிநாட்டு வா்த்தக தலைமை இயக்குநா் (டிஜிஎஃப்டி) லவ் அகா்வால், தொழில் மற்றும் உள்நாட்டு வா்த்தக மேம்பாட்டுத் துறை (டிபிஐஐடி) செயலா் அமா்தீப் சிங் பாட்டீயா உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

இந்தக் கூட்டத்தில் இண்டக்ஷன் அடுப்புகள், அவற்றில் பயன்படுத்தக் கூடிய பாத்திரங்கள் உற்பத்தியை எவ்வாறு விரைவுபடுத்துவது, அதிகரிப்பது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது என்று மத்திய அரசு அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

மேற்காசிய போா் காரணமாக சமையல் எரிவாயு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதைத் தொடா்ந்து, இண்டன்ஷன் அடுப்புகள் மற்றும் மின்சார கெட்டில்களின் விற்பனை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.