தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

ஆம் ஆத்மியின் மாநிலங்களவை துணைத் தலைவர் பதவியில் இருந்து ராகவ் சத்தா எம்.பி. நீக்கம்!

ஆம் ஆத்மியின் மாநிலங்களவை துணைத் தலைவர் பதவியில் இருந்து ராகவ் சத்தா எம்.பி. நீக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

News image

ராகவ் சத்தா எம்.பி. - படம்: பிடிஐ.

Updated On :2 ஏப்ரல் 2026, 2:41 pm IST

ஆம் ஆத்மியின் மாநிலங்களவை துணைத் தலைவர் பதவியிலிருந்து ராகவ் சத்தா எம்.பி. நீக்கப்பட்டுள்ளார்.

தில்லியின் முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுபடி கலால் கொள்கை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

இதுகுறித்து அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராகவ் சத்தா எதுவும் பொதுவெளியில் கருத்துத் தெரிவிக்கவில்லை. மேலும், சமூகவலைதளங்களில் கருத்து கூறவில்லை.

அதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான 37 வயதான ராகவ் சத்தா, ஆம் ஆத்மியின் கட்சி நிகழ்வுகளிலும் பங்கேற்பதைத் தவிர்த்து வந்தார். இதனால், அவருக்கு துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்குப் பதிலாக கட்சியின் புதிய துணைத் தலைவராக அஷோக் மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளார்.

அரவிந்த் கேஜரிவால் உள்பட உயர்நிலைத் தலைவர்கள் குறித்து மௌனம் காத்து வரும் ராகவ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ராகவ் சத்தாவுக்கு நாடாளுமன்றத்தில் பேசுவதற்கும் நேரம் ஒதுக்கக் கூடாது என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சியின் துணைத் தலைவர் பதவியிலிருந்து ராகவ் சத்தா நீக்கப்பட்டது தொடர்பாக மாநிலங்களவை செயலகத்திற்குத் தெரிவித்து ஆம் ஆத்மி கட்சி கடிதம் அனுப்பியுள்ளது.

ஆம் ஆத்மி கட்சிக்கு தற்போது மாநிலங்களவையில் 10 எம்பிக்கள் உள்ளனர். அவர்களில் ஏழு பேர் பஞ்சாபிலிருந்தும் மூன்று பேர் தில்லியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

ஆம் ஆத்மி கட்சியில் மிகவும் பிரபலமானவர்களில் ஒருவரான ராகவ் மீது நடவடிக்கைஎ எடுக்கப்பட்டிருப்பது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Summary

The Aam Aadmi Party has removed Raghav Chadha as its deputy leader in the Rajya Sabha, a post he has occupied since 2023, party sources said. He has been replaced by Punjab MP Ashok Mittal.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.