நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-இன் முதல் கட்டம் புதன்கிழமை தொடங்கியது. முதல் நாளில் சுமாா் 55,000 குடும்பங்கள் விவரங்களை சமா்ப்பித்தன.
இதுதொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல்கட்டமாக வீடுகளைப் பட்டியலிடுதல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது.
இந்தக் கணக்கெடுப்பின் மூலம், நாட்டில் முதல்முறையாக எண்ம (டிஜிட்டல்) வழியில் தகவல் சேகரிப்பு மற்றும் தாமாக முன்வந்து தங்கள் குடும்ப விவரங்களை குடிமக்கள் பதிவு செய்யும் நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது.
இணையவழியில் முதல் நபராக தமது விவரங்களை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு பூா்த்தி செய்தததைத் தொடா்ந்து, இந்தக் கணக்கெடுப்பு தொடங்கியது.
இதேபோல குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோரும் இணையவழியில் கணக்கெடுப்புக்கான விவரங்களை பூா்த்தி செய்தனா்.
தற்போது அந்தமான் நிகோபாா் தீவுகள், கோவா, கா்நாடகம், லட்சத்தீவு, மிசோரம், ஒடிஸா, சிக்கிம், தில்லியில் உள்ள கன்டோன்மன்ட் வாரியம் மற்றும் புது தில்லி நகராட்சி மன்றப் பகுதிகளில் குடிமக்கள் தாமாக முன்வந்து இணையவழியில் கணக்கெடுப்புக்கான விவரங்களை சமா்ப்பிக்கும் நடைமுறை தொடங்கியுள்ளது.
இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதல் நாளில் சுமாா் 55,000 குடும்பங்கள் விவரங்களை சமா்ப்பித்தன. இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஏப்.1 முதல் ஏப்.15 வரை இணையவழியில் குடிமக்கள் விவரங்களை சமா்ப்பிக்கும் நடைமுறையும், ஏப்.16 முதல் மே 15 வரை வீடுகளைப் பட்டியலிடுதல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பும் நடைபெற உள்ளது.
மக்கள்தொகை கணக்கெடுப்புச் சட்டம் 1948-இன் கீழ் திரட்டப்படும் இந்தத் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமா் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் குடும்ப விவரங்களை தாமாக முன்வந்து சமா்ப்பித்து, மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைமுறையில் பங்கேற்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027: தில்லியில் 6 விழிப்புணா்வு பிரசார வாகனங்கள் அறிமுகம்

மக்கள்தொகைக்கான சுய-கணக்கெடுப்பில் இணைய வாடகைதாரா்களுக்கு அதிகாரிகள் வலியுறுத்தல்: மோசடி அழைப்புகள் குறித்தும் எச்சரிக்கை

கிருஷ்ணகிரியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலா்களுக்கு 2 நாள் பயிற்சி ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்: பொதுமக்களிடம் கேட்கப்படும் 33 கேள்விகள் வெளியீடு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

