வளைகுடா நாடுகளில் போர் நடைபெற்று வரும் சூழலில், இதுவரை 5,80,000 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், வளைகுடா நாடுகளிடையே மிகவும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இதனிடையே, வளைகுடா நாடுகளின் விமானப் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதால், அந்நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த பிப். 28 ஆம் தேதி முதல் இதுவரை சுமார் 5,98,000 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளதாக, மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் (வளைகுடா) அசீம் ஆர். மஹாஜன் புதன்கிழமை (ஏப். 1) அன்று தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, அவர் கூறியதாவது:
“ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு இன்று சுமார் 90 விமானங்கள் இயக்கப்படவுள்ளன. சௌதி அரேபியா, ஓமன் ஆகிய நாடுகளிலிருந்தும் பல்வேறு இந்திய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. கத்தாரின் வான்வழிப் பாதை பாதியாகத் திறக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இன்று 8 முதல் 10 விமானங்கள் இந்தியாவுக்கு இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குவைத் மற்றும் பஹ்ரைனின் வான்வழிப் பாதை இதுவரை திறக்கப்படவில்லை. விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்கள் அர்மீனியா, அஜர்பைஜான் ஆகிய நாடுகளின் வழியாகவும், இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்கள் ஜோர்டான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் வழியாகவும் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல்களில் கடந்த பிப். 28 அன்று ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Summary
Central Government has announced that 580,000 Indians have returned to the country so far.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஈரானில் இருந்து நாடு திரும்பிய 2,300 இந்தியர்கள்! - மத்திய அரசு அறிவிப்பு!
வளைகுடா நாடுகளின் எரிசக்தி நிலையங்களைத் தாக்கும் ஈரான்!

வளைகுடா போர்! 4.26 லட்சம் பேர் நாடு திரும்பினர் - மத்திய அரசு அறிவிப்பு!

வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

