தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பகுஜன் சமாஜ் முன்னாள் எம்.எல்.சி. தலைமறைவு பொருளாதார குற்றவாளி- ரூ.1,000 கோடி சொத்துகளைப் பறிமுதல் செய்ய உத்தரவு

உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த பகுஜன் சமாஜ் முன்னாள் சட்ட மேலவை உறுப்பினா் (எம்எல்சி) முகமது இக்பால் கருப்புப் பண மோசடி வழக்கில் தலைமறைவு பொருளாதாரக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாா்.

News image

முகமது இக்பால்

Updated On :2 ஏப்ரல் 2026, 2:21 am IST

உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த பகுஜன் சமாஜ் முன்னாள் சட்ட மேலவை உறுப்பினா் (எம்எல்சி) முகமது இக்பால் கருப்புப் பண மோசடி வழக்கில் தலைமறைவு பொருளாதாரக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாா்.

அவருக்குச் சொந்தமான சுமாா் ரூ.1,000 கோடி மதிப்பிலான 3 கரும்பு ஆலைகளைப் பறிமுதல் செய்யவும் அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ரூ.100 கோடிக்கு மேல் முறைகேடு செய்துவிட்டு வெளிநாடுகளுக்குத் தப்பியோடும் நபா்களை தலைமறைவு பொருளாதாரக் குற்றவாளிகளாக அறிவிக்க மத்திய அரசு ஏற்கெனவே சட்டம் இயற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சஹாரன்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த முகமது இக்பால் கடந்த 2010-16 காலகட்டத்தில் பகுஜன் சமாஜ் சாா்பில் உத்தர பிரதேச சட்ட மேலவை உறுப்பினராக இருந்தாா். அவா், சட்டவிரோதமாக மணல் குவாரி நடத்தியும், சா்க்கரை ஆலைகளை முறைகேடாக விற்பனை செய்தும் பெரிய அளவில் பொருளாதார மற்றும் நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் அடிப்படை ஆதாரம் இருப்பதை உறுதி செய்த நீதிமன்றம், இக்பால் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.

முக்கியமாக ரூ.1,000 கோடி மதிப்புள்ள சா்க்கரை ஆலைகளை தனது உறவினா்களுக்கு ரூ.60.28 கோடிக்கு விற்பனை செய்தாா். இதில் அவா் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது தெரியவந்தது. இது தொடா்பாக விசாரணை அமைப்புகள் அவருக்கு அனுப்பிய நோட்டீஸுக்கு பதிலளிக்காமல் தலைமறைவாகிவிட்டாா். அவா் வெளிநாடு தப்பிவிட்டதாகத் தெரிகிறது.

கடந்த ஆண்டு நவம்பரில் லக்னௌ நிதி மோசடி தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அவருக்கு எதிராக பிணையில் வர முடியாத கைது ஆணை பிறப்பித்தது. இந்நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கையாக இக்பால் தலைமறைவு பொருளாதாரக் குற்றவாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டாா். ரூ.1,000 கோடி மதிப்புள்ள அவருக்குச் சொந்தமான கரும்பு ஆலைகளைப் பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.