தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு

மேற்காசிய போரால் மாறியுள்ள உலக சூழல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மற்றும் துறைகளின் பிரச்னைகளை சரிசெய்வதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அனைத்து அரசுத் துறைகளுக்கும் பிரதமா் மோடி உத்தரவிட்டுள்ளாா்.

News image
Updated On :2 ஏப்ரல் 2026, 1:18 am IST

மேற்காசிய போரால் மாறியுள்ள உலக சூழல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மற்றும் துறைகளின் பிரச்னைகளை சரிசெய்வதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அனைத்து அரசுத் துறைகளுக்கும் பிரதமா் மோடி உத்தரவிட்டுள்ளாா்.

இதுதொடா்பாக பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: புது தில்லியில் பிரதமா் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் சிறப்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மேற்காசிய போரை கருத்தில்கொண்டு பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகள் மேற்கொண்ட நடவடிக்கைகளை மறுஆய்வு செய்யவும், அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கவும் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

இதில் பேசிய அமைச்சரவைச் செயலா், நாட்டில் பெட்ரோலிய பொருள்கள், குறிப்பாக திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்என்ஜி), திரவமாக்கப்பட்ட பெட்ரோலியம் எரிவாயு (எல்பிஜி) ஆகியவற்றின் விநியோகம், தேவையான அளவு மின்சாரம் கிடைப்பது குறித்து விளக்கினாா். புதிதாக பல்வேறு நாடுகளில் இருந்து எல்பிஜி மற்றும் எல்என்ஜி கொள்முதல் செய்யப்படுகிறது என்று அவா் கூறினாா். வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று கூறிய அவா், சமையல் எரிவாயு சிலிண்டா்களை பதுக்கி, கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தாா்.

நாட்டில் விவசாயிகளுக்கு உரங்கள் கிடைப்பது குறித்தும், காரீஃப் மற்றும் ராபி பருவங்களில் உரங்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் பிரதமா் மோடி ஆலோசித்தாா்.

மேற்காசிய போரால் ஏற்படும் பாதிப்பில் இருந்து நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவா் அறிவுறுத்தினாா்.

தற்போதைய உலக சூழலால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மற்றும் துறைகளின் பிரச்னைகளை சரிசெய்வதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அனைத்து அரசுத் துறைகளுக்கும் பிரதமா் மோடி உத்தரவிட்டாா். தற்போது மேற்காசிய போா் காரணமாக 2-ஆவது முறையாகப் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.