தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

1.4.1976: அணுகுண்டு யுத்தம் ஏற்படக் கூடிய அபாயம்

அணுகுண்டு யுத்தம் ஏற்படக் கூடிய அபாயம் குறித்து விஞ்ஞானிகள்...

News image

1.4.1976 - DNS

Updated On :1 ஏப்ரல் 2026, 4:06 am IST

லண்டன், மார்ச். 30 - அணுகுண்டு யுத்தம் ஏற்படக் கூடிய சாத்தியம் இருக்கிறது என்றும், அணுகுண்டு யுத்தம் ஏற்படும் என்று தோன்றுகிறது என்றும் நான்கு பிரபல அமெரிக்க விஞ்ஞானிகள் திங்கட்கிழமை இரவு லண்டனில் ஒரு டெலிவிஷன் நிகழ்ச்சியில் பங்கு கொண்டபோது எச்சரித்தார்கள்.

வல்லரசுகள் அணு ஆயுத உற்பத்தி சாதனங்களை உலக நாடுகளுக்கு விற்பனை செய்வதை நிறுத்த சர்வதேச அளவில் மக்கள் இயக்கம் நடைபெற வேண்டும் என்றும், உலகில் உள்ள புளூடோனியம் அனைத்தையும் சர்வதேசக் கட்டுப்பாட்டின் கீழ் சேமித்து வைக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.

பயங்கரமாகவோ, தாறுமாறாகவோ அல்லது பைத்தியக்காரத்தனமாகவோ நடந்துகொள்ளக் கூடிய அரசாங்கத் தலைவர் ஒருவரிடம் அணுகுண்டு கிடைத்துவிடக்கூடும் என்றும் அவர்கள் எச்சரித்தார்கள்.

அணு சம்பந்தமான அறிவை இதர நாடுகளுக்குப் பரப்புகின்ற நாடுகளில் இந்தியா ஒன்று என்று அவர்கள் குறிப்பிட்டார்கள். அர்ஜென்டைனாவுடன் இந்தியாவின் ஒத்துழைப்பை சுட்டிக்காட்டினார்கள்

பிரான்ஸ் அணு ரியாக்டரை பாகிஸ்தானுக்கும், லிபியாவுக்கும் விற்பனை செய்வது பற்றி அவர்கள் கவலை தெரிவித்தார்கள்.

அணு ஆயுதங்கள் பெருகும் நிலையில், அணு விசை உடன்பாடுகளின் பயன்கள் சொற்பமானவை என்று அவர்கள் கூறினர். ...

அரசு ஊழியர்களுக்கு நிர்வாக டிரிப்யூனல் ஏற்படுமா?

புது டில்லி, மார்ச். 31- அரசு உத்யோகம் சம்பந்தமான விஷயங்களை கோர்ட்டுகளின் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டதாக்கி, இவற்றைக் கவனிக்க நிர்வாக டிரிப்யூனல்களை ஏற்படுத்துவது பற்றி விரைவில் ஒரு முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, லோக்சபையில் உள் நாட்டிலாகா துணை அமைச்சர் ஓம் மேத்தா அறிவித்தார்.

உள்துறைக்கான மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதத்தில் ஓம் மேத்தா குறுக்கிட்டுப் பேசினார். இத்தகைய ஏற்பாடு அரசு ஊழியர்களுக்கு மிகவும் துரிதமான, இன்னும் பலனுள்ள பரிகாரத்தை அளிக்கும் என்று வாதிக்கப்படுவதாக அவர் கூறினார்.

இப்போது கோர்ட்டுகளில் இத்தகைய வழக்குகள் ஏராளமாகக் குவிந்திருப்பதாகவும், ரிட் மனுக்கள் மூலம் இந்த வழக்குகள் போடப்பட்டிருப்பதாகவும் சுட்டிக் காட்டப்படுவதாக ஓம் மேத்தா கூறினார். இப்போதைய நிலைமையால் பல திருப்தியளிக்காத விளைவுகள் இருப்பதாகவும் இவை கட்டுப்பாட்டையும், திறமையையும் பாதிப்பதாகவும் கூறினார்.

நிர்வாகத்தின் தரத்தை அபிவிருத்தி செய்ய சமீபத்திய மாதங்களில் பல நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக அமைச்சர் கூறினார். ...

Summary

1.4.1976: The Danger of a Nuclear War

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.