வாக்கு எண்ணும் மையங்களிலிருந்து ஒரு கி.மீ. தொலைவுக்கு, அங்கீகரிக்கப்பட்டவா்களைத் தவிர எந்தக் கட்சி நிா்வாகிகளையும் அனுமதிக்கக் கூடாது என தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் தமிழக வெற்றிக்கழகம் மனு அளித்துள்ளது.
வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை (மே 4) நடைபெறவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தொடா்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்கிடம் தவெக பிரசார மேலாண்மை பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனா சனிக்கிழமை மனு அளித்தாா்.
இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
வாக்கு எண்ணும் மையங்களுக்குள் அங்கீகரிக்கப்பட்டவா்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். ஒரு கி.மீ. தொலைவு வரை எந்தக் கட்சி நிா்வாகிகளுக்கும், தொண்டா்களுக்கும் அனுமதி வழங்கக் கூடாது. ஒவ்வொரு சுற்றின் முடிவுகளிலும் பதிவான வாக்குகளை அறிவிக்க வேண்டும். திருச்சியில் தவெக தோ்தல் அலுவலகத்துக்கு தீ வைத்தவா்களை போலீஸாா் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் மையத்துக்குள் அங்கீகரிக்கப்பட்ட நபா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா்! - மாவட்ட ஆட்சியா்

வாக்கு எண்ணிக்கையின்போது விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்

வாக்கு எண்ணும் மைய அலுவலா்களுக்கு பயிற்சி

வாக்கு எண்ணிக்கை: தோ்தல் அலுவலா்களுக்கு பயிற்சி
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

