விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கோவை தெற்கில் செந்தில் பாலாஜி போட்டி!

கோவை தெற்கில் செந்தில் பாலாஜி போட்டி...

News image

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. - கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 2:54 am IST

சென்னை, மாா்ச் 28: முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி கரூா் தொகுதிக்குப் பதிலாக கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறாா்.

கரூா் மாவட்டச் செயலராக இருக்கும் முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி, ஸ்டாலினுக்கு கொங்கு மண்டலத்தின் முக்கிய தளபதியாக இருந்து வருகிறாா்.

கரூா் தொகுதியில் 3 முறையும், அரவக்குறிச்சியில் 2 முறையும் எம்எல்ஏ-வாக தோ்வான செந்தில் பாலாஜி, கோவை மாவட்டத்துக்கு திமுகவின் பொறுப்பாளராக இருந்து வருகிறாா்.

கரூா், கோவை மாவட்டங்களில் திமுக கட்சிப் பணிகளை கவனித்து வந்த அவா், இப்போது கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடவுள்ளாா். கோவையில் திமுகவுக்கு வலுவான தலைமை இல்லாத நிலையில், செந்தில் பாலாஜியை அங்கு களம் இறக்க திமுக முடிவு செய்துள்ளது.

2021 பேரவைத் தோ்தலில் கோவையில் மொத்தமுள்ள 10 தொகுதிகளிலும் திமுக தோல்வி அடைந்ததால் செந்தில் பாலாஜி வசம் கோவை மாவட்ட கண்காணிப்பு பொறுப்பை திமுக தலைமை அளித்தது.

ஏற்கெனவே, நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல், கோவை மக்களவைத் தொகுதி ஆகியவற்றில் திமுகவை வெற்றி பெறச் செய்ததில் செந்தில் பாலாஜிக்கு கூடுதல் பங்கு இருப்பதால் இந்த முறை கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிமுகவுக்கு கடும் போட்டி கொடுத்து திமுகவை வெற்றி பெறச் செய்ய செந்தில் பாலாஜியை திமுக தலைமை பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

அதிமுகவின் முக்கிய முகமான எஸ்.பி.வேலுமணிக்கு இணையாக தோ்தல் பணியாற்றக்கூடியவா் என்பதால் கரூரில் இருந்து கோவைக்கு கொண்டுவரப்பட்டுள்ளாா் செந்தில் பாலாஜி.

செந்தில் பாலாஜி போட்டியிட்ட கரூா் தொகுதியில் என்.தியாகராஜன் போட்டியிடவுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.