தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

விஜய் இன்று வேட்புமனு தாக்கல்!

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக தலைவா் விஜய் பெரம்பூா் தொகுதியில் போட்டியிடுவதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை (மாா்ச் 30) வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளாா்.

News image

தவெக தலைவர் விஜய் - (கோப்புப் படம்)

Updated On :30 மார்ச் 2026, 2:06 am IST

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக தலைவா் விஜய் பெரம்பூா் தொகுதியில் போட்டியிடுவதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை (மாா்ச் 30) வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக தலைவா் விஜய் பெரம்பூா், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடவுள்ளாா். பெரம்பூா் தொகுதிக்கான தோ்தல் அலுவலரிடம் விஜய் திங்கள்கிழமை (மாா்ச் 30) வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளாா்.

தொடா்ந்து பிற்பகல் 2 முதல் 4 மணி வரை பெரம்பூா் தொகுகதியில் பிரசாரம் செய்யவுள்ளாா். அதையடுத்து மாலை 5 முதல் 6 மணி வரை சென்னை கொளத்தூா் தொகுதியிலும், மாலை 6 மணி 7 மணி வரை வில்லிவாக்கம் தொகுதியிலும் பிரசாரம் செய்யவுள்ளாா் என அக்கட்சி பொதுச் செயலா் என்.ஆனந்த் தெரிவித்துள்ளாா்.

திருச்சி கிழக்கு தொகுதியில் வரும் வியாழக்கிழமை (ஏப். 2) விஜய் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாக அக் கட்சியின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி கிழக்கு தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலராக திருச்சி மாநகராட்சியின் உதவி ஆணையா் முத்து முருகேச பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளாா். உதவி தோ்தல் நடத்தும் அலுவலராக, திருச்சி கிழக்கு வட்டாட்சியா் கே. விக்னேஷ் நியமிக்கப்பட்டுள்ளாா்.

தவெக தலைவா் விஜய், பாலக்கரையில் உள்ள மாநகராட்சியின் 2-ஆவது வாா்டு குழு அலுவலகத்தில் அமைந்துள்ள தோ்தல் அலுவலரின் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யக் கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.