ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஆதவ் அர்ஜுனா கார் ஏறி காவலர் கால் முறிவு!

ஆதவ் அர்ஜுனா கார் ஏறி காவலர் கால் முறிந்தது பற்றி...

News image

ஆதவ் அர்ஜுனா கார் ஏறி காவலர் கால் முறிவு - X

Updated On :2 ஏப்ரல் 2026, 2:32 pm IST

திருச்சியில் தவெக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் கார் ஏறியதில் காவலரின் கால் முறிந்தது.

திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட தவெக தலைவர் விஜய் வியாழக்கிழமை பகல் 12 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

தொடர்ந்து, திருச்சி மரக்கடை பகுதியில் பிரசார வாகனத்தின் நின்றபடி மக்கள் மத்தியில் உரையாற்றினார். விஜய்யுடன் கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில், பிரசாரம் நிறைவடைந்து விஜய்யுடன் பிரசார வாகனத்தில் ஆதவ் அர்ஜுனா பயணித்துக் கொண்டிருந்தார். பிரசார வாகனத்தை பின்தொடர்ந்து ஆதவ் அர்ஜுனாவின் காரை அவரது ஓட்டுநர் ஓட்டியுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு காவலர் சதீஷ் என்பவரின் கால் மீது ஆதவ் அர்ஜுனாவின் கார் ஏறியதில் முறிவு ஏற்பட்டது.

வலியால் துடித்த காவலரை சக காவலர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் இணைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

Summary

Police Officer Suffers Broken Leg After Being Hit by Adhav Arjuna's Car!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.