எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் துரோகம் செய்துவிட்டதாகவும், அவர் தவெகவின் கருப்பு ஆடு என்றும் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா விமர்சித்துள்ளார்.
தவெக பிரசார மேலாண்மை பொதுச்செயலரும், வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளருமான ஆதவ் அர்ஜுனா, வில்லிவாக்கம் பகுதியில் இன்று(ஏப். 12) வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு ஆதவ் அர்ஜுனா பதிலளித்துப் பேசியதாவது:
திமுக இரண்டாவது முறையாக வெற்றியடைந்த வரலாறே இல்லை, எதாவது ஒரு சக்தி அவர்களின் வெற்றியைத் தடுத்து நிறுத்தும், அப்படியொரு புதிய சக்தியாக எங்களுடைய தலைவர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார்.
வில்லிவாக்கம் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் இல்லை, எம்எல்ஏவும் வெளியே வருவதும் இல்லை.
கொளத்தூர் வரும் முதல்வர், வில்லிவாக்கத்துக்கு வருவது இல்லை, ஆனால் தற்போது முதல்வரின் மகன் உதயநிதி, மருமகன் உள்ளிட்ட ஒட்டுமொத்த குடும்பமே வில்லிவாக்கத்தில் இருக்கிறது.
தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியால் பெரம்பூர், வில்லிவாக்கத்தில் தவெகவை வெல்ல வேண்டும் என்பதற்காக பணமூட்டைகளைக் கொண்டுவந்துள்ளனர். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.
மதச்சார்ப்பற்ற கொள்கையிலும் சமூக நீதி கொள்கையிலும் உறுதியாக இருப்பதால் 233 தொகுதிகளிலும் தனிப்பெரும்பான்மையுடன் தவெகவை ஆட்சியில் அமர்த்த மக்கள் முடிவு செய்துவிட்டனர்.
எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் துரோகம் செய்துவிட்டார், அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் கருப்பு ஆடு. பழனிசாமி கொடுத்த பணத்துக்கு எடப்பாடி தவெக வேட்பாளர் விலை போய்விட்டார்.
எடப்பாடி தொகுதியில் பழனிசாமிக்கு கடும் போட்டியை கொடுப்போம். எடப்பாடி தொகுதியில் யாருக்கு ஆதரவு என்பதை தலைவர் முடிவு செய்வார்.
Summary
Tvk functionary Aadhav Arjuna has criticized the party's candidate for the Edappadi constituency, alleging that he has committed an act of betrayal and is the "black sheep" of TaVeKa.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வாக்குக்கு ரூ. 5,000 கொடுக்கும் திமுக: தவெக குற்றச்சாட்டு
ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

முதல்வர் ஸ்டாலினை விட பல மடங்கு சொத்து! வில்லிவாக்கம் வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா!
விஜய் மீது வழக்குப்பதிவு... மிரட்டும் செயல்: ஆதவ் அர்ஜுனா
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


