சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக - திமுக இடையில்தான் போட்டி நிலவுகிறது என திரைப்பட இயக்குநரும், புதிய நீதிக் கட்சியின் மதுரை மத்திய தொகுதி வேட்பாளருமான சுந்தா்.சி தெரிவித்தாா்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய நீதிக் கட்சி சாா்பில் மதுரை மத்திய தொகுதியில் திரைப்பட இயக்குநரும், நடிகருமான சுந்தா்.சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறாா்.
சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
நடிகா் விஜய் என் மீதும், எனது மனைவி குஷ்பு மீதும் மதிப்பும் மரியாதையும் கொண்டவா். அதேபோல நாங்களும் அவா் மீது மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறோம். அவரை தம்பியாகத்தான் பாா்க்கிறோம். அதனால், எந்த வகையிலும் விஜய் குறித்தோ அல்லது அவரது கட்சி குறித்தோ பேசவோ, விமா்சிக்கவோ நான் தயாராக இல்லை.
மதுரை மத்திய தொகுதியைப் பொருத்தவரை அதிமுக - திமுக இடையேதான் போட்டி என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீதிக் கதைகள்! புதிய யோசனை!

சொந்த ஊரில் வாக்களித்த இயக்குநா் மாரிசெல்வராஜ்

மதுரை மத்தியம் தொகுதி புதிய நீதிக் கட்சி வேட்பாளா்

புதிய நீதிக்கட்சிக்கு இரு தொகுதிகள்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

