தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

நீட் தேர்வில் விலக்கு; 5 லட்சம் பேருக்கு அரசு வேலை! பாமகவின் தேர்தல் அறிக்கை வெளியீடு!!

பாட்டளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைவர் அன்புமணி இன்று (ஏப்.1) வெளியிட்டார்.

News image

பாமக தலைவர் அன்புமணி.

Updated On :1 ஏப்ரல் 2026, 12:28 pm IST

பாமகவின் தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைவர் அன்புமணி இன்று (ஏப்.1) வெளியிட்டார். அதில், 5 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ளன. மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் முனைப்பில் இருக்கும் திமுகவும், எதிர்க்கட்சியான அதிமுகவும் தேர்தல் வேலைகளைத் தீவிரப்படுத்தியிருக்கின்றன. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டளி மக்கள் கட்சி தருமபுரி உள்பட 18 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இந்த நிலையில், சென்னை தியாகராய நகரில் உள்ள பாட்டளி மக்கள் கட்சி அலுவலகத்தில் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அங்கு பாமகவின் தேர்தல் வாக்குறுதிகளை அவர் வெளியிட்டார்.

அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஆளும் கட்சியான திமுக, எங்கள் வாக்குறுதியை காப்பியடிக்கின்றனர். அவர்கள் (திமுக) 505 வாக்குறுதிகள் கொடுத்து அதில் வெறும் 66 மட்டுமே நிறைவேற்றியிருக்கிறது. திமுகவின் தேர்தல் அறிக்கை கதாநாயகனும் கிடையாது, கதாநாயகியும் கிடையாது. அது குரூப் டான்ஸர் போன்றது”என்றார்.

பாமகவின் தேர்தல் வாக்குறுதிகள்

• 5 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும்

• 2026 - 2027 இரண்டு ஆண்டுகளில் மட்டும் 2.5 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும்.

• கிராம நிர்வாக அலுவலர் உள்பட குரூப்-4 பணிகளுக்கு 35 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுவார்கள்

• குரூப்-2 பணிகளுக்கு 10,000 பேர் தேர்வு செய்யப்படுவார்கள்.

• வகுப்புக்கு ஒரு ஆசிரியர் வீதம் நிரப்பவும், ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. அதில், முதற்கட்டமாக 40,000 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்.

• காவல் துறை, தீயணைப்புத்துறையில் 20,000 பேருக்கு வேலை வாய்ப்பு.

• போக்குவரத்துத்துறையில் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு.

• மின்சாரத்துறையில் 16,000 பேருக்கு வேலை வாய்ப்பு.

• மருத்துவத்துறையில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட 7000 பேருக்கு வேலை வாய்ப்பு.

• நீட் நுழைவுத் தேர்வில் தமிழ்நாட்டில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டும் விலக்கு பெறப்படும்.

PDF
பாட்டளி மக்கள் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்
பார்க்க

Summary

PMK President Anbumani released the party's election manifesto today (April 1). In it, he stated that government jobs would be provided to 500,000 people.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.