பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

பொறியியல் கலந்தாய்வு! ரேண்டம் எண் முக்கியத்துவம் பெறுவது ஏன்?

பொறியியல் கலந்தாய்வில் மாணவர்களுக்கான ரேண்டம் எண் முக்கியத்துவம் பெறுவது பற்றி..

News image

பொறியியல் கலந்தாய்வு - file photo

Updated On :50 நிமிடங்கள் முன்பு

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் வழங்கப்படும் பொறியியல் படிப்பில் மாணவா் சோ்க்கைக்கான சமவாய்ப்பு எண் (ரேண்டம் எண்) இன்று வெளியாகிறது.

TNEA இணையதளத்தில் மாணவர்கள் தங்களது ரேண்டம் எண்ணை அறிந்து கொள்ளலாம். . ஜூன் 29ஆம் தேதி ரேங்க் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்த 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான ரேண்டம் இன்று வெளியிடப்படுகிறது. இந்த ரேண்டம் எண் அடிப்படையில் பொறியியல் கலந்தாய்வுக்கு மாணவர்கள் அழைக்கப்படுவார்கள் என்பதே இதன் மிகப்பெரிய முக்கியத்துவம் ஆகும்.

ஒரே மதிப்பெண் எடுத்த மாணவர்களை தகுதிநிலை அடிப்படையாக வைத்து சமநிலைப்படுத்தும் வகையில் இந்த ரேண்டம் எண் வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர் என்பதால், மாணவர்கள் தங்களது ரேண்டம் எண்ணை அறிந்துகொள்வது மிகவும் முக்கியம்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலைப் படிப்புகளில் உள்ள மாணவர் சேர்க்கை இடங்கள் ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி, நிகழாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு, தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.