ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஜேஇஇ முதன்மைத் தேர்வு! மாணவர்களுக்கான மிக முக்கிய அறிவுறுத்தல்கள் என்னென்ன?

ஜேஇஇ முதன்மைத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான மிக முக்கிய அறிவுறுத்தல்கள் பற்றி...

News image

ஜேஇஇ முதன்மைத் தேர்வு - கோப்புப்படம் - ANI

Updated On :20 ஜனவரி 2026, 12:52 pm IST

ஜேஇஇ முதல் கட்ட முதன்மைத் தோ்வு ஜன. 21ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் நிலையில், மாணவர்களுக்கான மிக முக்கிய அறிவுறுத்தல்களை தேர்வை நடத்தும் என்டிஏ வெளியிட்டுள்ளது.

நிகழ் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல் கட்ட முதன்மைத் தோ்வு புதன்கிழமை முதல் நடைபெறவுள்ள நிலையில் தோ்வா்களுக்கான அனுமதிச் சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதனை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

மாணவர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்கள்..

மாணவர்கள் தேர்வு மையத்துக்குள் நுழையும் போது, பதிவிறக்கம் செய்யப்பட்ட நுழைவுச் சீட்டு, இரண்டு பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படங்கள், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை கையில் வைத்திருக்க வேண்டும்.

ஆதார் அடையாள அட்டையை அடிப்படையாக வைத்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்யாத மாணவர்கள், முன்கூட்டியே தேர்வு மையத்தை அடைய வேண்டும். தேர்வு மைய நுழைவாயில் மூடப்படுவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக, தேர்வு மையத்துக்குக் கட்டாயமாக வர வேண்டும்.

மாணவர்கள், பால்-பாயிண்ட் பேனா வைத்துக் கொள்ளலாம்.

தேர்வு மையம் எங்கிருக்கிறது என்பதில் குழப்பம் இருந்தால், முன்கூட்டியே தேர்வு மையத்தை வந்து பார்த்துக் கொள்வது நல்லது.

முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட நுழைவுச் சீட்டை, மாணவர்கள் அதற்குரிய பெட்டியில் செலுத்திவிட்டுத்தான் செல்ல வேண்டும். தவறும் மாணவர்களின் விடைத்தாள் திருத்தப்படாது.

தோ்வுக்கு இடையே கழிப்பறைக்கு அல்லது தோ்வறையிலிருந்து வெளியே சென்று வரும் மாணவா்களுக்கு மீண்டும் உயிரி வருகைப் பதிவும், சோதனையும் மேற்கொள்ளப்படும்.

கையில் குடிநீர் பாட்டில் வைத்திருக்க அனுமதிக்கப்படும். தளர்வான ஆடைகள் அணியலாம்.

டிஜிட்டல் வாட்ச் அணிந்து வர வேண்டாம். டிஜிட்டல் பொருள்களை கொண்டு வர அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்டிஏ வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வில் (ஜேஇஇ) தோ்ச்சி பெற வேண்டும். இவை ஜேஇஇ முதன்மைத் தோ்வு, பிரதானத் தோ்வு என இரு பிரிவாக நடைபெறும். இதில், முதன்மைத் தோ்வானது தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 2026-2027-ஆம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தோ்வு புதன்கிழமை (ஜன. 21) தொடங்கி ஜன.30-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

இந்தத் தோ்வை எழுத 12 லட்சத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவா்களுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை என்டிஏ கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியிட்டது. அதை மாணவா்கள் jeemain.nta.nic.in என்ற தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தத் தோ்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் நடைபெறும்.

கூடுதல் விவரங்களை nta.ac.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். மேலும், 011-40759000/69227700 என்ற தொலைபேசி எண் அல்லது jeemain@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடா்புகொண்டு மாணவா்கள் விளக்கம் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்டிஏ சாா்பில் நடத்தப்படும் முதன்மைத் தேர்வில் தகுதி பெற்று பிரதான தேர்வை எழுதுவார்கள். பிரதான தோ்வில் தகுதி பெறும் மாணவா்கள் நாடு முழுவதும் உள்ள என்ஐடி, ஐஐஐடி உள்ளிட்ட மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் இளநிலை பொறியியல் தொழில்நுட்ப படிப்புகளில் சோ்க்கை பெற முடியும்.

Summary

About the most important instructions for students appearing for the JEE Main exam...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.