இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை! முதல்வர் விஜய் உலக சாதனை படைத்த மெஸ்ஸி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா!முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு! திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!ஏய் என்ற வார்த்தை அவைக் குறிப்பில் நீக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன்திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்!தமிழகத்தில் 11 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியே இல்லை! விஜய்
/

நீட் தெரியும்! அது என்ன நாட்டா தேர்வு? யார் எழுத வேண்டும்?

கட்டடக் கலைத் துறையில் பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கான நாட்டா (NATA) தேர்வு பற்றி..

News image

நாட்டா தேர்வு - file photo

Updated On :1 மணி நேரம் முன்பு

நாட்டில் கட்டடக் கலை தொடர்பான படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் நாட்டா (NATA) தேர்வில் எடுத்த மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டே மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன.

எனவே, பிஆர்க் எனப்படும் கட்டடக் கலையில் இளநிலை அல்லது முதுநிலை கல்வி பயில விரும்பும் மாணவர்கள் நாட்டா தேர்வை எழுத வேண்டும். தேசிய ஆப்டிடியூட் டெஸ்ட் இன் ஆர்கிடெக்சர் - என்ஏடிஏ எனப்படுகிறது. இதனை கவுன்சில் ஆஃப் ஆர்கிடெக்சர் என்ற அமைப்பு நடத்துகிறது.

மாணவர்களின் வரையும் ஆற்றல், தர்க்கரீதியான சிந்தனை போன்றவற்றை மதிப்பிடும் வகையில் தேர்வு இருக்கும். பல கட்டங்களாக இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.

கணிதம், இயற்பியல், வேதியியல், பொது அறிவு மற்றும் வரைதல் திறன் கண்டறிவது என்ற வகையில் தேர்வு நடைபெறும். மொத்த மதிப்பெண்கள் 200. 70 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி என்று அறிவிக்கப்படும். இந்த தேர்வை எழுத மொத்த கால அவகாசம் 3 மணி நேரங்கள்.

இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பது, தேர்வு நடைமுறைகள் என அனைத்தையும் மாணவர்கள் https://www.nata.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

இந்த தேர்வும் நாட்டில் நடைபெறும் கடினமான தேர்வுகளில் ஒன்றுதான் நாட்டா என்பதால், அடுத்த ஆண்டு தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் இன்று முதலே அதற்குத் தயாராக வேண்டியது அவசியம்.

நாட்டா பற்றி..

நாட்டா தேர்வு குறித்து அதிகாரப்பூர்வ இணையதளத்தில், NATA என்பது பல்வேறு தேர்வு முறைகள் மூலம் ஒரு விண்ணப்பதாரரின் இயல்பான திறனை மதிப்பிடும் ஒரு தகுதித் தேர்வாகும்; இதனைப் பயிற்சியின் மூலமோ அல்லது கற்றல் மூலமோ பெறவோ அல்லது செயற்கையாக உருவாக்கவோ முடியாது.

குறிப்பிட்ட கல்வித் துறையான கட்டடக்கலை (Architecture) சார்ந்த துறையில் விண்ணப்பிக்கும் மாணவரின் திறனை இத்தேர்வு அளவிடுகிறது.

இதற்காக, கடந்த சில ஆண்டுகளில் அந்தத் துறை தொடர்பாக விண்ணப்பதாரர் பெற்ற அறிவுடன், அறிவாற்றல் திறன்கள், காட்சிப் புலன் உணர்வு மற்றும் அழகியல் உணர்திறன், தர்க்கரீதியான பகுத்தறிவு மற்றும் விமர்சன ரீதியான சிந்தனைத் திறன் ஆகியவையும் சோதிக்கப்படுகின்றன என்று பதிவிடப்பட்டுள்ளது.

Summary

Know about NEET But what is this NATA exam? Who needs to take it?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.