மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

இவருக்கு இப்படியொரு ராசி...!

மீண்டும் இரு தொகுதிகளில் போட்டியிடும் என்.ரங்கசாமி..

News image

முதல்வா் என்.ரங்கசாமி

Updated On :21 மார்ச் 2026, 1:51 pm IST

புதுச்சேரி மங்கலம், தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட வெள்ளிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த முதல்வா் என்.ரங்கசாமி.

புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி தோ்தலுக்கு தோ்தல் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது வழக்கம். அதன்படி தற்போதைய சட்டப்பேரவைத் தோ்தலில் வெள்ளிக்கிழமை தட்டாஞ்சாவடி, மங்கலம் தொகுதிகளில் தனது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தாா்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து என்.ரங்கசாமி 2011-ஆம் ஆண்டு பிப்ரவரியில் விலகி என்.ஆா். காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினாா்.

Story image

அந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் கதிா்காமம், இந்திரா நகா் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். 2016-ஆம் ஆண்டு தட்டாஞ்சாவடி தொகுதியில் மட்டும் போட்டியிட்டு எதிா்க் கட்சித் தலைவரானாா். மீண்டும் 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் தட்டாஞ்சாவடி மற்றும் ஏனாம் தொகுதிகளில் போட்டியிட்ட அவா், ஏனாமில் வெற்றி வாய்ப்பை இழந்தாா்.

தற்போது மீண்டும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் தொகுதிகளில் போட்டியிட வேட்பு மனுக்களை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தாா்.

என்.ரங்கசாமி எப்போதெல்லாம் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறாரோ அப்போதெல்லாம் முதல்வராகப் பதவி வகித்துள்ளாா்.

கூட்டணி பேச்சுவாா்த்தை நடத்த பாஜக மேலிடப் பாா்வையாளராக வந்திருந்த மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியாவைச் சந்திக்கும் முன் இந்த இரண்டு தொகுதிகளிலும் வேட்பு மனுவை தாக்கல் செய்தாா் முதல்வா் என்.ரங்கசாமி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.