பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஜிவி பிரகாஷ் நடிக்கும் வெக்கை! போஸ்டர் வெளியீடு!

ஜிவி பிரகாஷின் புதிய படம் குறித்து...

News image

வெக்கை போஸ்டர்

Updated On :30 மே 2026, 6:15 pm IST

நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகும் திரைப்படத்தின் பெயர் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இசையமைப்பில் 100 திரைப்படங்களைக் கடந்த ஜிவி பிரகாஷ் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இறுதியாக, இவர் நடிப்பில் வெளியான ஹேப்பி ராஜ் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இதற்கிடையே, தெலுங்கு மற்றும் தமிழ்த் திரைப்படங்களுக்கு இசையமைத்தும் வருகிறார். தற்போது, ஜோ படத்தின் இயக்குநர் இயக்கும் புதிய படத்தில் கிரிக்கெட் வீரராக நடிக்கவுள்ளார்.

Story image

தற்போது, இயக்குநர் பா. இரஞ்சித்தின் நீலம் புரடக்‌ஷன்ஸ் நிறுவனம் மற்றும் டிவைன் புரடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் ஜிவி நடித்து முடித்துள்ளார். இயக்குநர் பா. இரஞ்சித்தின் நீண்டகால இணை இயக்குநரான அகிரன் மோசஸ், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

சென்னையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கு, ‘வெக்கை’ எனப் பெயரிட்டுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். வில்லனாக பிரபல மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசியும் நாயகியாக ஷிவானி ராஜசேகர் நடித்துள்ளனர். இப்படம் அடுத்த சில மாதங்களில் திரைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

The title poster for the upcoming film starring actor G.V. Prakash has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.