விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சக்திவேல் தொடரின் இரண்டாம் பாகம் 707 நாள்களுடன் நிறைவடைந்தது.
திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த தொடர் சக்திவேல். இந்தத் தொடர் கடந்த 2023 டிசம்பர் 4 முதல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
முதல் பாகத்தில் பிரவீன் ஆதித்யா நாயகனாகவும், அஞ்சலி பாஸ்கர் நாயகியாகவும், இவர்களுடன் ரேஷ்மா பிரசாத், மெர்வென் பாலாஜி உள்ளிட்ட பலர் முக்கியப் பாத்திரங்களில் நடித்திருந்தனர்.
தனது உரிமைகளுக்காகப் போராடும் நாயகி, ரெளடியை(நாயகன்) திருமணம் செய்துகொண்டு, நாயகி சந்திக்கும் சவால்களை மையப்படுத்தி இந்தத் தொடரின் முதல் பாகம் எடுக்கப்பட்டு வந்தது.
சக்திவேல் தொடரின் முதல் பாகம் கடந்த அக்டோபர் மாதம் நிறைவடைந்த நிலையில், நாயகன் சிறைக்குச் செல்வதுபோல, காட்சியமைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த அக். 21 ஆம் தேதி முதல் சக்திவேல் தொடரின் இரண்டாம் பாகம், 7 ஆண்டு சிறைத் தண்டனைக்குப் பிறகு, ரெளடியாக இருந்த நாயகன் திருந்தி வாழ முயற்சி செய்கிறார். இதனால், இவர் எதிர்கொள்ளும் சவால்களை மையப்படுத்தி இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது.
முதல் பாகத்தில் வேலன் பாத்திரத்தில் பிரவீன் ஆதித்யா நடித்திருந்த நிலையில், இரண்டாம் பாகத்தில் விக்ரம் ஸ்ரீ நடித்திருந்தார். தேனம்மை பாத்திரத்தில் நடித்த விஜே சந்தியாவுக்குப் பதிலாக, சஹானா நடித்திருந்தார்
இந்த நிலையில், சக்திவேல் தொடரில் வேலுவும் சக்தியும் இணைவதுபோல, காட்சியமைக்கப்பட்டு, பரபரப்பான இறுதிக்கட்ட காட்சிகளுடன் கடந்த சனிக்கிழமை 707 நாள்களுடன் நிறைவடைந்தது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சக்திவேல் நிறைவடைந்த நிலையில், இதற்கு மாற்றாக பகல் 1.30 மணிக்கு தனம் தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.
Summary
The second season of the series Shakthivel, which aired on Vijay TV, concluded after 707 days.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புனிதா தொடரின் படப்பிடிப்பு நிறைவு!

மீண்டும் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் முதல் பாகம்!

1200 நாள்களைக் கடந்த எதிர்நீச்சல் தொடர்!

விரைவில் நிறைவடைகிறது சக்திவேல் - 2 தொடர்!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


