மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பெரம்பூர் கானா... அன்பே டயானா படத்தின் முதல் பாடல் வெளியீடு!

அன்பே டயானா படத்தின் முதல் பாடல் வெளியீடு...

News image

அன்பே டயானா பட போஸ்டர் - X

Updated On :21 மார்ச் 2026, 6:14 pm IST

அன்பே டயானா திரைப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகியுள்ளது.

ஜமா திரைப்படம் மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் கவனம் பெற்றவர் பாரி இளவழகன். அந்தத் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து அவர் இயக்கி நடித்துள்ள புதிய திரைப்படம் ’அன்பே டயானா’.

லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி ஆகிய திரைப்படங்களைத் தயாரித்த மில்லியன் டாலர் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

நாயகியாக ரம்யா ரங்கநாதன் நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில் சேத்தன், ரோஜா, பரிதாபங்கள் கோபி ஆகியோர் நடித்துள்ளனர். பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.

சென்னை பெரம்பூரில் நடக்கும் காதல் கதையாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் டீசர் சில நாள்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது, இப்படத்தின் முதல் பாடலான ‘பெரம்பூர் கானா’ வெளியாகியுள்ளது. ஜாஸ்ஸி கிஃப்ட் பாடிய இப்பாடலை மோகன் ராஜன், பாக்கியம் சங்கர், முத்தமிழ் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்.

இப்படம் கோடை வெளியீடாக திரையரங்குகளில் வெளியாகின்றது.

Summary

Anbe diana first single released

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.