ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

புரோ கோட் பெயரை மாற்றும் ரவி மோகன்!

புரோ கோட் திரைப்படத்தின் பெயர் குறித்து...

News image

நடிகர்கள் ரவி மோகன், எஸ்ஜே சூர்யா, அர்ஜுன் அசோகன்

Updated On :11 மார்ச் 2026, 2:50 pm IST

புரோ கோட் திரைப்படத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிகிறது.

நடிகர் ரவி மோகன் தயாரிப்பில் உருவாகும் முதல் திரைப்படம் புரோ கோட் (Bro code). இதில், ரவி மோகனுடன் எஸ். ஜே. சூர்யா, அர்ஜுன் அசோகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படம் திருமணமான ஆண்கள் சந்திக்கும் பிரச்னைகளைப் பேசுவதாக எடுக்கப்பட்டு வருகிறது.

இதன், அறிமுக புரோமோ விடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, பிரபல மதுமான நிறுவனமான புரோ கோட் தில்லி உயர்நீதிமன்றத்தில் ரவி மோகனின் புரோ கோட் படத்தின் பெயருக்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடுத்துள்ளனர்.

காரணம், புரோ கோட் நிறுவனம் தமிழகத்தில் புதிய மதுபான வகைகளை அறிமுகம் செய்ய ரவி மோகனின் படத்தை புரமோஷனாக பயன்படுத்த அணுகியதாகவும் அவர் மறுத்ததால் இந்நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது.

இந்த நிலையில், டீசரில் புரோ கோட் திரைப்படத்தின் பெயரை நீக்கியுள்ளனர். இதனால், இப்படம் இனி புரோ கோட் பெயரில் இருக்காது என்றும் புதிய பெயர் விரைவில் அறிவிக்கப்படலாம் என்றும் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.