தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஓடிடியில் வெளியாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகரின் புதிய படம்!

டியர் ரதி படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...

News image
Updated On :4 மார்ச் 2026, 4:07 pm IST

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பிரபலம் சரவண விக்ரம் நடிப்பில் வெளியான டியர் ரதி திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்தில் கண்ணன் பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் சரவண விக்ரம். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று மக்கள் மத்தியில் கவனம் பெற்றார்.

இவர் டியர் ரதி என்ற படத்தில் புதிய படத்தில் நடித்துள்ளார். இப்படம் கடந்த ஜனவரியில் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் மற்றும் லாக்லைன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த டியர் ரதி படத்தில் சரவண விக்ரமுடன் ஹஸ்லி அமான், ராஜேஷ் பாலச்சந்திரன், சாய் தினேஷ் பத்ராம், யுவராஜ் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பிரவீன் கே. மணி இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். மோகனா மஞ்சுளா தயாரித்துள்ளார்.

டியர் ரதி திரைப்படம் வரும் மார்ச் 6 ஆம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

Summary

The movie Dear Rathi, starring Saravana Vikram of Pandian Stores series fame, is being released on the OTT platform.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.