பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஆர்.ஜே. பாலாஜி சர்ச்சை! ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை?

சூர்யா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆர்.ஜே. பாலாஜியை விமர்சித்த நிலையில் அதற்கு அறிவுரை வழங்கும் விதமாக சூர்யா பதிவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

News image

சூர்யா / முதல்வர் விஜய்யுடன் ஆர்.ஜே. பாலாஜி

Updated On :4 ஜூன் 2026, 9:35 pm IST

சூர்யா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆர்.ஜே. பாலாஜியை விமர்சித்த நிலையில் அதற்கு அறிவுரை வழங்கும் விதமாக சூர்யா பதிவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, த்ரிஷா நடிப்பில் உருவான கருப்பு திரைப்படம் கடந்த மே 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்தப் படத்தில் இந்திரன்ஸ், ஸ்வாசிகா, சிவதா, நட்டி நடராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி ’பேபி கண்ணன்’ என்ற பாத்திரத்தில் வில்லனாக நடித்துள்ளார். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று 3 வாரங்களாக திரையரங்குளை ஆக்கிரமித்துள்ளது. கருப்பு திரைப்படம் உலகளவில் இதுவரை ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

இந்த நிலையில், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜியை சூர்யா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

ஆர்.ஜே. பாலாஜி முதல்வர் விஜய்யை சமீபத்தில் சந்திக்கச் சென்றிருந்தார். அதுதொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து ’கருப்பு படத்தைத் தொடங்கி வைத்த மனிதருடன்’ என்று குறிப்பிட்டிருந்தார். இது சூர்யா ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

கருப்பு படத்தின் கதையை முன்னர் கேட்ட விஜய் அரசியல் ஈடுபாடு காரணாமாக நடிக்க முடியாமல் போனதாகவும், அதற்கு பின்னே சூர்யா இதில் இணைந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஆர்.ஜே. பாலாஜி விஜய் நடிக்க முடியாமல் போனதால் கருப்பு படத்தில் சூர்யா நடித்ததாகக் கூறியிருப்பார்.

தொடர்ந்து, விஜய்யை முன்னிலைப்படுத்தி ஆர்.ஜே. பாலாஜி பேசியதால் சூர்யா ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் விமர்சிக்கத் தொடங்கினர்.

இதனைத் தொடர்ந்து, சூர்யா இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘அன்புடன் முன்னே செல்லுங்கள். பணிவாக இருங்கள். பெருந்தன்மையுடன் இருங்கள்’ என்று பதிவிட்டிருந்தார்.

இது ஆர்.ஜே. பாலாஜியை விமர்சிக்கும் அவரது ரசிகர்களுக்காக சூர்யா கூறியதாக சமூக வலைதள வாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சூர்யாவின் பதிவு

சூர்யாவின் பதிவு

Summary

R.J. Balaji Controversy! Surya Advises Fans?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.