மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஆதிக்கம் செலுத்தும் ஆயா சேர்!

ஆயா சேர் பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வைகளை நெருங்கியது...

News image

நடிகர் நானி

Updated On :9 ஏப்ரல் 2026, 1:21 pm IST

நடிகர் நானி படத்தில் இடம்பெற்ற ஆயா சேர் பாடல் யூடியூபில் 10 கோடி பார்வைகளை நெருங்கியுள்ளது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நானி நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் “தி பாரடைஸ்”. இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கும் இப்படம் மிகப் பெரியளவில் பிரம்மாண்டமாக உருவாகிறது.

இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்த இப்படத்தின் முதல் பாடலான ’ஆயா சேர்’ அபாரமான வரவேற்பைப் பெற்றது. முக்கியமாக, இன்ஸ்டாகிராமில் இப்பாடலின் நடன அசைவுகளை மறு உருவாக்கம் செய்து பலரும் ரீல்ஸ் செய்தனர்.

அண்மையில், ஹைதராபாத்தில் அனிருத் நடத்திய இசைக்கச்சேரியில் ஆயா சேர் பாடல் பாடப்பட்டதும் நானி உள்பட ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நடனமாடி உற்சாகமடைந்தனர்.

இந்த நிலையில், யூடியூபில் இப்பாடல் 10 கோடி (100 மில்லியன்) பார்வைகளைக் நெருங்கி அசத்தலான வெற்றியைப் பெற்றுள்ளது. இப்பாடலை அதுல்லா ஜாங்கிரெட்டி, அர்ஜுன் சாண்டி பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.