ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ராவுக்குப் பிறகு, நீண்ட இடைவெளியான 17 ஆண்டுகள் கழித்து உலக அழகியாக இந்தியாவிலிருந்து தேர்வானார் மனுஷி சில்லர். அவ்வகையில் இந்தியாவுக்கு மீண்டும் அழகு மகுடம் சூட்டிப் பெருமை சேர்த்தவர் இவர்.

உலகம் முழுவதுமான மீடியாவின் உடனடி கவனத்தைப் பெற்றுவிட்ட மனுஷியை திரைப்படங்களில் நடிக்குமாறு பாலிவுட் கோரிக்கை விடுத்தது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த மனுஷி ஒரே ஒரு பேட்டியில் நடிகர் அமிர்கானுடன் நடிக்க விருப்பம் உள்ளது என்று தெரிவித்திருந்தார்.

நடிகைகள் மற்றும் பிரபலங்கள் தங்கள் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருவது தான் இன்றைய ட்ரெண்ட். உடை, சூழல் ஆகிவற்றை மாற்றி தினமும் வெவ்வேறு போஸ்களில் படங்களை அப்லோட் செய்து வருகின்றனர்.

போலவே, உலக அழகி மனுஷியும் தனது படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.

காதலர் தின ஸ்பெஷலாக தற்போது பிகினி உடையில் தனது படத்தை ‘சம்மர் வைப்ஸ்’என்ற குறிப்புடன் பகிர்ந்திருக்கிறார் மனுஷி.

மேலும் உலகப் புகழ்ப்பெற்ற ஆங்கில இதழான காஸ்மாபாலிட்டனின் அட்டை படத்தை அலங்கரித்த புகைப்படத்தையும் பதிவேற்றியுள்ளார் இந்த உலக அழகி.

இவை உடனடியாக இணையத்தில் வைரலாகி இதுவரை 422,664 லைக்குகளைப் பெற்றுள்ளது. அவரது ரசிகர்கள் தங்கள் கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் பின்னூட்டமாக மனுஷியின் பதிவில் எழுதி தங்கள் அன்பைத் தெரிவித்துள்ளனர்.

மருத்துவ மாணவியான மனுஷி, பயிற்சி பெற்ற குச்சிப்புடி நடனக் கலைஞராவார். தற்போது சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து சமூக அக்கறையுடன் பல்வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

குறிப்பாக மாதவிடாய் சமயத்தில் பெண்களின் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை வழங்கி வரும் ஆர்வலராகச் செயல்படுகிறார் மனுஷி. தற்போது இதுகுறித்து உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த யானையை பட்டாசு வெடித்து விரட்டிய வனத் துறையினா்

மேக்கேதாட்டு அணை விவகாரம்: விடுதலைச் சிறுத்தைகள் ஆா்ப்பாட்டம்
சாலை விபத்தில் காயம் அடைந்தவா் உயிரிழப்பு

விவசாயிக்கு கொலை மிரட்டல்: பெண் உள்ளிட்ட 6 போ் மீது வழக்கு
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

