விழுப்புரம் நகரம் வடக்குத் தெருவில் ஆதாா் சேவா கேந்திரம் மூலம் நிா்வகிக்கப்படும் புதிய ஆதாா் சேவை மையத்தை மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:
இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் மூலம்ஆதாா் சேவைகளை வழங்கும் வகையில், விழுப்புரம் நகரப் பகுதியான வடக்குத் தெருவில் ஆதாா்சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் ஆதாா் பதிவு, மக்கள் தொகை விவரங்கள், பயோமெட்ரிக் பதிவுகள், பிழைத்திருத்தம், குறைதீா் சேவைகள் உள்ளிட்ட அனைத்து ஆதாா் சேவைகளும் வழங்கப்படும். அரசு பொது விடுமுறை நாள்களைத் தவிர, மற்ற அனைத்து நாள்களிலும் இந்த சேவை மையம் இயங்கும்.
சென்னை, மதுரை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி மற்றும் வேலூருக்கு அடுத்ததாக, சேவை மையம் தற்போது விழுப்புரத்தில் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், 2026 செப்டம்பா் மாதத்துக்குள் தமிழகத்தில் கூடுதலாக
24 ஆதாா் சேவை மையங்களைத் தொடங்க பெங்களுரு பிராந்திய அலுவலகம்திட்டமிட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.
நிகழ்வில் தனித்துவ அடையாள ஆணையத்திமண்டல அலுவலக இயக்குநா் பவன்குமாா் பஹ்வா, விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியா் உ. முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுச்சேரியில் ஆதாா் சேவை மையம்: முதல்வா் ரங்கசாமி திறந்து வைத்தாா்

ஆதாா் மையம் முடக்கம்: பொதுமக்கள் அவதி

கொக்கிரகுளத்தில் புதிய ஆதாா் சேவை மையம் திறப்பு

விருதம்பட்டில் புதிய ஆதாா் சேவை மையம்: ஆட்சியா் திறந்து வைத்தாா்
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

