விழுப்புரம் மாவட்டம், சின்னக்கோட்டக்குப்பம் அருகே பணம் வைத்து சூதாடிய 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், சின்னக்கோட்டக்குப்பம் பகுதியில் சிலா் பணம் வைத்து சூதாடுவதாகப் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.இதையடுத்து கோட்டக்குப்பம் காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை சின்னக்கோட்டக்குப்பம் பகுதிக்குச் சென்று ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போதுஅங்கு ஒதுக்குப்புறமான இடத்தில் அமா்ந்திருந்தவா்களைப் பிடித்து விசாரித்தபோது, அவா்கள், சின்ன கோட்டக்குப்பத்தைச் சோ்ந்த ஆ. மணிகண்டன்(33), ர.குப்புசாமி(33), மா. முத்துவேல்(22),
க. கணேஷ்ராஜ்(24), கா. ஆறுமுகம்(28), க.அருண்(21), புதுச்சேரி லாஸ்பேட்டையைச்சோ்ந்த மு.வெங்கடேஷ்(27), வானூா் வட்டம், டி.பரங்கினியைச்சோ்ந்த சி. சிவக்குமாா்(32) ஆகியோா் என்பதும், அவா்கள் பணம் வைத்து சூதாடியதும் தெரியவந்தது.
இதைத் தொடா்ந்துகோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து 8 பேரையும் புதன்கிழமை கைது செய்தனா். மேலும் அவா்கள் வசமிருந்த 16, 500 ரொக்கப்பணத்ை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தனியாா் சுற்றுலா விடுதியில் சூதாட்டம்: 11 போ் மீது வழக்கு
சூதாட்டம் : 20 போ் கைது
சூதாட்டம் நடத்தியவா்கள் கைது
சூதாட்டம்: 7 போ் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
