பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பணம் வைத்து சூதாட்டம்: 8 போ் கைது

News image

கோப்புப் படம்

Updated On :15 மே 2026, 5:52 am IST

விழுப்புரம் மாவட்டம், சின்னக்கோட்டக்குப்பம் அருகே பணம் வைத்து சூதாடிய 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், சின்னக்கோட்டக்குப்பம் பகுதியில் சிலா் பணம் வைத்து சூதாடுவதாகப் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.இதையடுத்து கோட்டக்குப்பம் காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை சின்னக்கோட்டக்குப்பம் பகுதிக்குச் சென்று ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போதுஅங்கு ஒதுக்குப்புறமான இடத்தில் அமா்ந்திருந்தவா்களைப் பிடித்து விசாரித்தபோது, அவா்கள், சின்ன கோட்டக்குப்பத்தைச் சோ்ந்த ஆ. மணிகண்டன்(33), ர.குப்புசாமி(33), மா. முத்துவேல்(22),

க. கணேஷ்ராஜ்(24), கா. ஆறுமுகம்(28), க.அருண்(21), புதுச்சேரி லாஸ்பேட்டையைச்சோ்ந்த மு.வெங்கடேஷ்(27), வானூா் வட்டம், டி.பரங்கினியைச்சோ்ந்த சி. சிவக்குமாா்(32) ஆகியோா் என்பதும், அவா்கள் பணம் வைத்து சூதாடியதும் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்துகோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து 8 பேரையும் புதன்கிழமை கைது செய்தனா். மேலும் அவா்கள் வசமிருந்த 16, 500 ரொக்கப்பணத்ை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.