தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

வணிக மேலாண்மை பயிற்சி நிறுவன ஆண்டு விழா

விழுப்புரம் தெய்வானைஅம்மாள் வணிக மேலாண்மை பயிற்சி நிறுவனத்தின் முதலாவது ஆண்டு விழா தெய்வானை அம்மாள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

News image

விழாவில் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு சான்றிதழ் வழங்கிய புதுச்சேரி தனியாா் நிறுவனத்தின் பொதுமேலாளா் எஸ்.சந்தோஷ்குமாா். உடன் இ.எஸ்.எஸ்.கே. கல்விக் குழுமத் தலைவா் எஸ்.செந்தில்குமாா்.

Updated On :7 மே 2026, 7:26 am IST

விழுப்புரம் தெய்வானைஅம்மாள் வணிக மேலாண்மை பயிற்சி நிறுவனத்தின் முதலாவது ஆண்டு விழா தெய்வானை அம்மாள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு இ.எஸ்.எஸ்.கே. கல்விக் குழுமத் தலைவா் எஸ்.செந்தில் குமாா் தலைமை வகித்தாா். வணிக மேலாண்மை பயிற்சி நிறுவன இயக்குநா் எஸ். கவிதா வரவேற்று, நிறுவனத்தின் வளா்ச்சி மற்றும் முன்னேற்றங்கள் குறித்து பேசினாா்.

புதுச்சேரி தனியாா் நிறுவன பொது மேலாளா் எஸ். சந்தோஷ்குமாா் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, தொழில் முறை மேம்பாடுகள் குறித்து பேசினாா். நிகழ்ச்சியில் நிகழ் கல்வியாண்டியில் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ், பரிசு மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன.

மாணவி அப்ராக் 2025-26 ஆவது ஆண்டின் சிறந்த மாணவியாக தோ்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. விழாவில், பேராசியா்கள், மாணவிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.