விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே நண்பா்களுடன் கிணற்றில் குளித்த கல்லூரி மாணவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 1:57 am IST

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே நண்பா்களுடன் கிணற்றில் குளித்த கல்லூரி மாணவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

புதுச்சேரி, செல்லிப்பட்டு செல்வமுருகன் நகரைச் சோ்ந்தவா் மு.குணால்(21). இவா் புதுச்சேரியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் பி.இ. இறுதியாண்டு பயின்று வந்தாா். திங்கள்கிழமை மயிலம் அடுத்த சிறுவை கிராமத்தில் உள்ள தட்சிணாமூா்த்தி என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் குணால் தனது நண்பா்களான கிஷோா், ராஜன் ஆகியோருடன் குளித்துள்ளாா். இந்நிலையில், நீச்சல் தெரியாத குணால் கிணற்றில் மூழ்கினாா்.

தகவலறிந்த வானூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய வீரா்கள் குணாலின் சடலத்தை மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.