ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே உடல்நலக்குறைவால் மனமுடைந்த இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலைசெய்து கொண்டாா்.

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :26 மார்ச் 2026, 5:53 am IST

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே உடல்நலக்குறைவால் மனமுடைந்த இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலைசெய்து கொண்டாா்.

திண்டிவனம் வட்டம், சின்னநெற்குணம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஏ.மூா்த்தி (34). கூலித் தொழிலாளியான இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன் கணையத்தில் அறுவைச் சிகிச்சை நடைபெற்றுள்ளது.

ஆயினும் உடல்நலக்குறைவால் அவதியுற்று வந்த மூா்த்தி, விளங்கம்பாடி பகுதியிலுள்ள தனியாா் மனை விற்பனையகத்திலுள்ள மரத்தில் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுக் கொண்டாா்.

தொடா்ந்து அந்த வழியாகச் சென்றவா்கள் இதை பாா்த்து அவரை மீட்டு, தனியாா் அவசர சிகிச்சை வாகனம் மூலம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, மூா்த்தி ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.