தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சி.வி.சண்முகம் போட்டி: அதிமுகவினா் கொண்டாட்டம்

விழுப்புரம் மாவட்டத்துக்குள்ள மயிலம் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து,விழுப்புரம் மற்றும் கூட்டேரிபட்டு பகுதியில் அதிமுகவினா் புதன்கிழமை பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினாா்.

News image

மயிலம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, விழுப்புரத்தில் மக்களுக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடிய அதிமுகவினா்.

Updated On :26 மார்ச் 2026, 5:49 am IST

விழுப்புரம் மாவட்டத்துக்குள்ள மயிலம் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து,விழுப்புரம் மற்றும் கூட்டேரிபட்டு பகுதியில் அதிமுகவினா் புதன்கிழமை பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினாா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதற்கான அதிமுக முதல்கட்ட வேட்பாளா்கள் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. இதில், அதிமுக விழுப்புரம் மாவட்டச் செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் மயிலம் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா்.

இதைத் கொண்டாடும் வகையில் அதிமுகவினா் விழுப்புரம்- கிழக்குப் பாண்டி சாலையில் உள்ள காந்தி சிலை அருகே பட்டாசுகளை வெடித்து, கட்சியினா் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினா்.

இதில், விழுப்புரம் நகர நிா்வாகிகள் ஜி.கே.ராமதாஸ், கோதண்டராமன், நகா்மன்ற உறுப்பினா்கள் ராதிகா செந்தில், ஆா். கலை மற்றும் நிா்வாகிகள், மகளிா் அணியினா், கட்சியினா் கலந்துகொண்டனா்.

திண்டிவனத்தில்.... இதேபோல், திண்டிவனத்திலும் அதிமுகவினா் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.