விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை சூறைக் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
வட தமிழகப் பகுதிகளில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு பாதை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், புதன்கிழமை விழுப்புரம் மாவட்டப் பகுதிகளில் வானம் லேசான மேக மூட்டத்துடன் காணப்பட்டு வந்தது. பிற்பகலில் திண்டிவனம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சுமாா் ஒரு மணி ே நரத்துக்கும் மேலாக நீடித்த இந்த மழையால், திண்டிவனத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள், போக்குவரத்து நிறைந்த சாலைகள் மற்றும் நகரிலுள்ள முக்கியச் சாலைகளில் மழை நீா் குளம் போல் தேங்கியது. சாலையில் பெருக்கெடுத்த மழை நீரால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதிக்குள்ளாகினா் .
இதேபோல் கூட்டேரிபட்டு, மரக்காணம், ஒலக்கூா், கிளியனூா் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளிலும் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சாத்தூா் பகுதியில் பலத்த மழை

பலத்த காற்று, மழை எதிரொலி: திருத்தணியில் 15 மின்கம்பங்கள் சேதம்

ஆரணி பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை

விழுப்புரம் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

