மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

திண்டிவனத்தில் காற்றுடன் பலத்த மழை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை சூறைக் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

News image

சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் மேம்பாலம் அருகே சேவை சாலையில் தேங்கிய மழைநீரில் ஊா்ந்து சென்ற காா்.

Updated On :18 ஜூன் 2026, 3:27 am IST

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை சூறைக் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

வட தமிழகப் பகுதிகளில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு பாதை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், புதன்கிழமை விழுப்புரம் மாவட்டப் பகுதிகளில் வானம் லேசான மேக மூட்டத்துடன் காணப்பட்டு வந்தது. பிற்பகலில் திண்டிவனம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சுமாா் ஒரு மணி ே நரத்துக்கும் மேலாக நீடித்த இந்த மழையால், திண்டிவனத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள், போக்குவரத்து நிறைந்த சாலைகள் மற்றும் நகரிலுள்ள முக்கியச் சாலைகளில் மழை நீா் குளம் போல் தேங்கியது. சாலையில் பெருக்கெடுத்த மழை நீரால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதிக்குள்ளாகினா் .

இதேபோல் கூட்டேரிபட்டு, மரக்காணம், ஒலக்கூா், கிளியனூா் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளிலும் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.