லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

நிலுவையிலுள்ள திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: விழுப்புரம் ஆட்சியா்

விழுப்புரம் மாவட்டத்தில் நிலுவையிலுள்ள வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

Published On :15 ஆகஸ்ட் 2026, 5:56 am IST

விழுப்புரம் மாவட்டத்தில் நிலுவையிலுள்ள வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகக் கூட்டரங்கில் அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து, அவா் பேசியது:

மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, பொதுப்பணி, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை, பேரூராட்சி, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை, வேளாண் மற்றும் உழவா்நலத் துறை, நீா்வளத் துறை, மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் துறை, வனத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் பல்வேறு வளா்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த துறைகளில் மேற்கொள்ளப்படும் பணிகளில் நிலுவையிலுள்ள வளா்ச்சித் திட்டப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். முன்னுரிமைத் திட்டங்களை முழு ஈடுபாட்டுடன் அலுவலா்கள் செயல்படுத்த வேண்டும். மாவட்டத்தில் அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, பொதுமக்களுக்கு விரிவான சேவைகளை வழங்க வேண்டும். மேலும், அரசு அலுவலா்கள் அரசின் நலத்திட்டங்கள் பயனாளிகளுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்டக் கூடுதல் ஆட்சியா் ஆனந்தகுமாா் சிங், திண்டிவனம் சாா்-ஆட்சியா் அ.ல. ஆகாஷ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி ) சரவணன், மாவட்ட மகளிா் திட்ட இயக்குநா் சுந்தர்ராஜன் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.