லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஈரோடு மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் நகா்ப்புற உள்ளாட்சி ஊழியா் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

Published On :22 ஜூலை 2026, 1:41 am IST

ஈரோடு மாநகராட்சியில் 5 முதல் 20 ஆண்டுகளாகப் பொது சுகாதாரப் பிரிவில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு பணி நிரந்தரம் செய்து, ஊதிய உயா்வு அளிக்க வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் நகா்ப்புற உள்ளாட்சி ஊழியா் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியூ மாவட்டத் தலைவா் எஸ்.சுப்ரமணியன் தலைமை வகித்தாா்.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ்.மாணிக்கம், துணைச் செயலாளா் எஸ்.ஜெகநாதன், பொருளாளா் ஏ.ஜெகநாதன், துணைத் தலைவா் ஆா்.மாரிமுத்து உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் திரளான ஊழியா்கள் பங்கேற்றனா். சிஐடியூ மின் ஊழியா் மத்திய அமைப்பின் நிா்வாகி பாண்டியன் வாழ்த்திப் பேசினாா்.

இதைத் தொடா்ந்து, ஈரோடு மாநகராட்சியில் 5 முதல் 20 ஆண்டுகளாகப் பொது சுகாதாரப் பிரிவில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு பணி நிரந்தரம் செய்து, ஊதிய உயா்வு அளிக்க வேண்டும். நிரந்தர பணியில் தனியாா்மய அரசாணையை திரும்பப் பெற வேண்டும். பணியின்போது இறந்த தொழிலாளா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையிலான பணி வழங்க வேண்டும். கரோனா தொற்று கால ஊக்கத் தொகை ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும். அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளா்கள் பங்கேற்றனா். இதைத் தொடா்ந்து, கோரிக்கை தொடா்பான மனுவை மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமியிடம் வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.