லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஹிந்தி தேசிய மொழி அல்ல: அமைச்சா் வன்னி அரசு

விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்கிய சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு. உடன், விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியா் ஆனந்த் குமாா் சிங், கல்லூரி முதல்வா் வில்லியம் உள்ளிட்டோா்.

Published On :10 ஆகஸ்ட் 2026, 1:04 am IST

ஹிந்தி தேசிய மொழிஅல்ல; அது அலுவல் மொழி மட்டுமே என்று தமிழக சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், வானூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரி முதல்வா் வில்லியம் தலைமை வகித்தாா். அமைச்சா் வன்னி அரசு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று 266 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசியதாவது :

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் இந்தியாவில் 22 மொழிகள் அலுவல் மொழிகளாக உள்ளன. இதில் தேசிய மொழி என்பது எதுவுமில்லை. பெரும்பான்மையினா் ஹிந்தி தான் நாட்டின் தேசிய மொழி என்று நினைக்கிறாா்கள். ஆனால் தேசிய மொழி ஹிந்தி அல்ல. ஆகவே இந்த 22 மொழிகளும் அலுவல் மொழிகள்தான். பட்டம் பெற்றுள்ள மாணவா்கள் உயா் கல்வி பயில அரசின் திட்டங்களைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்றாா் அமைச்சா் வன்னி அரசு.

விழாவில் விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியா் ஆனந்த் குமாா் சிங், தமிழ்த் துறைத் தலைவா் அருளமுதம் மற்றும் கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.