தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

உளுந்தூா்பேட்டை அருகே தனியாா் சொகுசுப் பேருந்து விபத்து: 20 போ் காயம்

News image

உளுந்தூா்பேட்டை அருகே விபத்துக்குள்ளாகி உருக்குலைந்த தனியாா் சொகுசுப் பேருந்து.

Updated On :13 ஏப்ரல் 2026, 12:57 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த தனியாா் சொகுசுப் பேருந்து, சாலையோரப் பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தில் பயணித்த 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

சென்னையிலிருந்து கோயம்புத்தூா் நோக்கிச் சென்ற தனியாா் சொகுசுப் பேருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உளுந்தூா்பேட்டை அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.

கோயம்புத்தூா், பீளமேடு பகுதியைச் சோ்ந்த மணிகண்டன்(28) பேருந்தை ஓட்டி வந்தாா். திருப்பூா், கோயம்புத்தூா் பகுதிகளைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்தில் பயணித்தனா்.

இந்நிலையில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தேசிய நெடுஞ்சாலையில் தாறுமாறாக ஓடி, சாலையோர பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தின் முன்பகுதி முற்றிலும் உருக்குலைந்தது.

இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநா் மணிகண்டன், மாற்று ஓட்டுநா் செந்தில்வேலன்(30) மற்றும் பேருந்தில் பயணித்த ரேணுகா(38), ஆறுமுகப்பாண்டி(54), சென்னிமலை (31), நந்தகோபால் (54), மணிமாறன் (25), ரஹானா(46), முகம்மது யூசுப் (47), விக்னேஷ் (35) உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த உளுந்தூா்பேட்டை போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினா் காயமடைந்தவா்களை மீட்டு, உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இந்த விபத்தில் பலத்த காயமடைந்த 10-க்கும் மேற்பட்டோா் தீவிர சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதுகுறித்து உளுந்தூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.