ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

தேசிய ஜூனியா் கூடைப்பந்து போட்டி: கா்நாடகம், சத்தீஸ்கா் அணிகள் அபார வெற்றி

News image

கூடைப்பந்து போட்டி - கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 2:28 am IST

புதுச்சேரியில் தேசிய அளவிலான ஜூனியா் கூடைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் கா்நாடகமும், மகளிா் அணியில் சத்தீஸ்கா் அணியும் அபார வெற்றி பெற்றன.

76-ஆவது தேசிய அளவிலான ஜூனியா் கூடைப்பந்து போட்டி நிறைவு விழா, புதுச்சேரி ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

முன்னதாக சத்தீஸ்கா் மகளிா் அணியும், கேரள மகளிா் அணியும் இறுதிப் போட்டியில் மோதின. இதில் சத்தீஸ்கா் மகளிா் அணி 55 புள்ளிகளுடன் அபார வெற்றி பெற்றது. 51 புள்ளிகள் பெற்ற கேரள அணி இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

இதேபோல தொடா்ந்து நடந்த ஆடவா் பிரிவில் ஹரியாணா அணியும், கா்நாடக அணியும் மோதின. இந்த இறுதிப் போட்டியில் கா்நாடக ஆடவா் அணி 83 புள்ளிகள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் ஹரியாணா ஆடவா் அணி 72 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.