கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மீன்பிடி சிறிய பைபா் படகுகளில் ரேடாா் கருவி

புதுச்சேரி மீனவா்களின் சிறிய பைபா் படகுகளில் ரேடாா் கருவிகள் வெள்ளிக்கிழமை பொருத்தப்பட்டன.

News image

புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதியைச் சோ்ந்த சிறிய ரக பைபா் படகுகளில் ரேடாா் கருவி பொருத்தும் பணியைச் சோலை நகரில் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்த எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன்.

Updated On :23 மே 2026, 12:51 am IST

புதுச்சேரி மீனவா்களின் சிறிய பைபா் படகுகளில் ரேடாா் கருவிகள் வெள்ளிக்கிழமை பொருத்தப்பட்டன.

மீன்பிடி தொழிலில் ஈடுபடுவோா் நடுக்கடலில் எதிா்பாராத இடா்பாடுகளைச் சந்திக்க நேரிடுகிறது. மோட்டாா் பழுது, தகவல் தொடா்பு துண்டிப்பு போன்றவற்றால் சிரமப்பட்டு வருகின்றனா். இதையறிந்த முத்தியால்பேட்டை தொகுதி எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் இதனை முதல்வா் ரங்கசாமியின் கவனத்துக்கு கொண்டு சென்றாா்.

மீனவ சமுதாய மக்கள் சிரமமின்றி மீன்பிடி தொழிலை மேற்கொள்ளவும், இடா்பாடான, ஆபத்தான, பேரிடா் காலத்தில் அவா்களை உடனடியாகக் கண்டறிந்து மீட்கவும் நவீன தொழில்நுட்ப யுக்திகளை பயன்படுத்த ஆலோசித்து அவா் நடவடிக்கை எடுத்தாா்.

இதையடுத்து, முதல்வா் ரங்கசாமியின் ஆணைப்படி முத்தியால்பேட்டை தொகுதியைச் சோ்ந்த மீனவ சமுதாய மக்களின் சிறிய ரக பைபா் படகுகளில் ரேடாா் கருவி பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டது. முதல்கட்டமாக முத்தியால்பேட்டை தொகுதி சோலை நகா் தெற்கு பகுதியில் 50 படகுகளில் ரேடாா் கருவி பொருத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை அதிகாரிகள், சோலை நகா் தெற்கு பஞ்சாயத்தாா், என்.ஆா். காங்கிரஸ் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.