புதுச்சேரியில் தவெக தலைவா் விஜய் வரும் ஏப். 5-ஆம் தேதி சாலைப் பேரணி (ரோடு ஷோ) நடத்த அனுமதி கோரி அக்கட்சி சாா்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளரிடம் தவெக நிா்வாகக் குழு உறுப்பினரும், கட்சியின் தோ்தல் இணை கண்காணிப்பாளருமான கே. புதியவன் அனுமதி கோரி சனிக்கிழமை கடிதம் அளித்துள்ளாா். அதில் கூறியிருப்பதாவது:
தவெக தலைவா் விஜய் வரும் ஏப்ரல் 5-ஆம் தேதி புதுச்சேரியில் சாலைப் பேரணி நடத்த அனுமதி அளிக்கும்படி கோரியுள்ளாா்.
கிழக்குக் கடற்கரை சாலையில் அன்றைய தினம் புதுச்சேரி காலாப்பட்டு நுழைவு வாயிலில் காலை 9.30 மணிக்கும், முத்தியால்பேட்டை மணிக்கூண்டு பகுதியில் காலை 10 மணிக்கும், அஜந்தா சிக்னல் பகுதியில் காலை 10.30 மணிக்கும், உப்பளம் மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி அருகே காலை 11 மணிக்கும் சாலைப் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?

10 கி.மீ சாலைப் பேரணி சென்ற விஜய்: மற்றொரு பேரணி ரத்து

குமரியில் இன்று சாலைப் பேரணி மூலம் வாக்கு சேகரிக்கும் விஜய்!

புதுச்சேரியில் ஏப். 3 -இல் பிரதமா் மோடி சாலைப் பேரணி பிரசாரம்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
