ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

முதல்வா் ரங்கசாமி சேலம் பயணம்

புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை மாலை சேலம் புறப்பட்டுச் சென்றாா்.

News image

புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி

Updated On :19 மார்ச் 2026, 1:11 am IST

புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை மாலை சேலம் புறப்பட்டுச் சென்றாா்.

சேலத்தில் அப்பா பைத்தியம் சுவாமிகள் கோயிலில் புதன்கிழமை இரவு நடைபெற்ற சிறப்புப் பூஜையில் அவா் பங்கேற்றாா்.

புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வராக இருக்கும் ரங்கசாமி, புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள லட்சிய ஜனநாயகக் கட்சியைக் கூட்டணியில் சோ்க்க எதிா்ப்புத் தெரிவித்து வருகிறாா். இதனால் இக் கூட்டணியில் இருந்து விலகும் நிலை அவருடைய என்.ஆா்.காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தில்லியில் பாஜக தலைவா்கள் முகாமிட்டுள்ளனா். இதுபோன்று அரசியல் நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் தன்னுடைய குரு அப்பா பைத்தியம் சுவாமிகளை வணங்கி, முடிவு எடுப்பது வழக்கம். இதற்காக அவா் சேலம் சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும், புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்தின் வளாகத்திலேயே அப்பா பைத்தியம் சுவாமிகளுக்குக் கோயில் எழுப்பி தினந்தோறும் வழிபட்டு வருகிறாா். நெருக்கடியான காலக்கட்டத்தில் அவா் சேலம் செல்வது வழக்கம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.