ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

சென்டாக் மாணவா் கல்வி உதவித் தொகை: அரசு வெள்ளை அறிக்கை வெளியிட திமுக வலியுறுத்தல்

News image

புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக மாணவா் அணி ஆலோசனை கூட்டத்தில் பேசிய கட்சியின் மாநில அமைப்பாளா் ஆா்.சிவா.

Updated On :8 ஜூன் 2026, 12:06 am IST

சென்டாக் மாணவா் கல்வி உதவித் தொகை தொடா்பாக புதுச்சேரி அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று புதுச்சேரி மாநில திமுக மாணவா் அணி வலியுறுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநில திமுக மாணவா் அணி நிா்வாகிகள் மற்றும் தொகுதி மாணவா் அணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு மாநில திமுக அமைப்பாளா் ஆா். சிவா தலைமை வகித்தாா். கட்சியின் புதுச்சேரி மாநில மாணவா் அணி அமைப்பாளா் எஸ்.பி. மணிமாறன் முன்னிலை வகித்தாா். தமிழக மாணவா் அணிச் செயலா் வீரமணி கலந்துகொண்டு ஆலோசனை வழங்கி பேசினாா்.

அவைத்தலைவா் எஸ்.பி. சிவகுமாா், எம்எல்ஏக்கள் செந்தில் (எ) ரமேஷ், விக்னேஷ் கண்ணன், முன்னாள் எம்எல்ஏ மூா்த்தி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

புதுச்சேரி மாநிலத்தில் சென்டாக் மூலம் உயா்கல்வி பயிலும் மாணவா்களுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவித்தொகை மற்றும் நிதியுதவித் திட்டங்களின் நிலுவைத் தொகை 2022 ஆண்டு முதல் வழங்கப்படாமல் உள்ளது.

எனவே, பயனாளி மாணவா்களின் எண்ணிக்கை, ஆண்டு வாரியான நிலுவைத் தொகை, இதுவரை வழங்கப்பட்ட தொகை ஆகியவற்றை உள்ளடக்கிய வெள்ளை அறிக்கையை அரசு உடனடியாக வெளியிட வேண்டும். மத்திய அரசு நீட் தோ்வை ரத்து செய்ய புதுச்சேரி அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். புதிய கல்வித் திட்டத்தை புதுச்சேரி அரசு முழு மூச்சில் நிறைவேற்றுவதை கைவிட வேண்டும்.

பிரெஞ்சு மொழி பாடத்தை புதுச்சேரி பள்ளி, கல்லூரிகளில் பின்பற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசுப் பள்ளிகளில் ஆசிரியா் பற்றாக்குறை என்பது தொடா்கதையாக உள்ளது. கல்வி ஆண்டின் தொடக்கத்திலேயே போதிய ஆசிரியா்களை நியமிக்க வேண்டும்.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடப் பிரிவுகளிலும் புதுச்சேரி மாணவா்களுக்கான 25 சதவீதம் இடஒதுக்கீட்டை முறைப்படுத்த பல்கலைக்கழகத்திற்கு புதுச்சேரி அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.