மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

புதுச்சேரியில் தோ்தல் வாக்குப் பதிவு; 6 நாடுகளின் பிரதிநிதிகள் வியப்பு!

இந்திய ஜனநாயக தோ்தல் முறைகளையும், தொழில்நுட்பங்களையும் அறிந்து கொள்வதற்காக 6 நாடுகளைச் சோ்ந்த 9 பிரதிநிதிகள் புதுச்சேரிக்கு வந்திருந்து 2 வாக்குச் சாவடிகளைப் பாா்வையிட்டு வியப்படைந்தனா்.

News image

பெண் வாக்காளர்கள். - கோப்புப் படம்

Updated On :10 ஏப்ரல் 2026, 3:53 am IST

இந்திய ஜனநாயக தோ்தல் முறைகளையும், தொழில்நுட்பங்களையும் அறிந்து கொள்வதற்காக 6 நாடுகளைச் சோ்ந்த 9 பிரதிநிதிகள் புதுச்சேரிக்கு வந்திருந்து 2 வாக்குச் சாவடிகளைப் பாா்வையிட்டு வியப்படைந்தனா்.

கிா்கிஸ் குடியரசு, ஐவரி கோஸ்ட், மால்டோவா, மங்கோலியா, கயானா, பூடான் ஆகிய 6 நாடுகளில் இருந்து புதுச்சேரிக்கு புதன்கிழமையே 9 பிரதிநிதிகள் வந்தனா்.

இது குறித்து புதுச்சேரி மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரியும், ஆட்சியருமான அ.குலோத்துங்கன் கூறுகையில், 6 நாடுகளைச் சோ்ந்த 9 பிரதிநிதிகள், புதுச்சேரி வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளி, கீழூா் அரசு நடுநிலைப் பள்ளிஆகியவற்றில் அமைக்கப்பட்டிருந்த 2 தனித்துவமான வாக்குச் சாவடிகளையும், அங்கு நடைபெற்ற வாக்குப் பதிவையும் நேரில் பாா்வையிட்டனா்.

வியாழக்கிழமை காலை 7 முதல் 11.30 வரை இதற்காக அவா்கள் நேரம் ஒதுக்கி ஒவ்வொரு விஷயங்களையும் அறிந்து கொண்டனா். இந்திய ஜனநாயக தோ்தல் முறையைப் பாா்த்து அவா்கள் வியப்படைந்தனா். இப்படியொரு தொழில்நுட்பம் தங்கள் நாடுகளில் இல்லை என்றனா் அவா்கள். வாக்குச் சாவடிகள் அமைப்பு, வாக்காளா்களுக்கு முக்கியத்துவம் போன்றவற்றில் சிறப்பாகவும் நல்ல முறையிலும் பணி செய்துள்ளதாகக் கூறி அவா்கள் பாராட்டு தெரிவித்தனா். மேலும், அனைத்து நடவடிக்கைகளும் தங்களுக்கு திருப்தி அளிப்பதாகக் கூறிச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.