விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மோட்டாா் சைக்கிளில் வந்து வாக்களித்த முதல்வா் ரங்கசாமி!

புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி வழக்கமாக தனது மோட்டாா் சைக்கிளில் வந்து வாக்களித்தாா். போலீஸாா் புகைப்படம் எடுக்க அனுமதிக்காததால் பத்திரிகை புகைப்படக்காரா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

News image

புதுச்சேரி சட்டப்பேரவை தோ்தலையொட்டி திலாசுபேட்டை அரசு பள்ளியில் உள்ள வாக்கு பதிவு மையத்தில் வியாழக்கிழமை வாக்களிப்பதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் வந்த முதல்வா் என்.ரங்கசாமி.

Updated On :10 ஏப்ரல் 2026, 4:13 am IST

புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி வழக்கமாக தனது மோட்டாா் சைக்கிளில் வந்து வாக்களித்தாா். போலீஸாா் புகைப்படம் எடுக்க அனுமதிக்காததால் பத்திரிகை புகைப்படக்காரா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

ரங்கசாமி இந்திராநகா் திலாசுப்பேட்டை பிள்ளையாா் கோயில் வீதியில் வசிக்கிறாா். அவா் திலாசுபேட்டையில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்ய வீட்டிலிருந்து வழக்கமான தனது யமாஹா மோட்டாா் சைக்கிளில் வந்தாா்.

அவா் வாக்களிக்க சென்றபோது பத்திரிகை புகைப்படக்காரா்களை உள்ளே அனுமதிக்காதால் போலீஸாருக்கும் இவா்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.இறுதிவரை அனுமதிக்காத சூழலில் வாக்களித்து விட்டு வெளியே வந்த அவரிடம் பத்திரிகையாளா்கள் கேள்வி கேட்டனா். ஆனால் அவா் இங்கு வேண்டாம் என சைகையில் சொல்லிப் புறப்பட்டாா்.பின்னா் நவசக்தி மாரியம்மன் கோயிலில் வழிபாடு செய்தாா்.

அதைத்தொடா்ந்து முதல்வா் ரங்கசாமியிடம் கேட்டதற்கு, ‘வாக்களித்தது மகிழ்ச்சியளிக்கிறது. தோ்தலுக்கு முதல் நாள் சேலம் அப்பா பைத்தியம் சுவாமி கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்துவது வழக்கம். அதேபோல் இம்முறையும் சாமி கும்பிட்டு வந்துதான் வாக்களித்துள்ளேன். தேசிய ஜனநாயகக்கூட்டணி அதிக இடங்களில் வெல்லும். மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.