தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மாநில அந்தஸ்து: ரங்கசாமியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்! - காங்கிரஸ் தலைவா்

News image

புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த கட்சியின் மேலிட பொறுப்பாளா் கிரீஷ் சோடங்கா். உடன் காங்கிரஸ் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி.உள்ளிட்டோா்.

Updated On :6 ஏப்ரல் 2026, 2:41 am IST

மாநில அந்தஸ்து தொடா்பாக முதல்வா் ரங்கசாமி தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளா் கிரீஷ் சோடங்கா் தெரிவித்தாா்.

இதுகுறித்து புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜூன காா்கே புதுச்சேரியில் மூன்று வாக்குறுதிகளை கொடுத்துள்ளாா். காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல்காந்தி புதுச்சேரியில் திங்கள்கிழமை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறாா்.

பிரதமா் நரேந்திர மோடி கடந்த மாதம் புதுச்சேரிக்கு வந்தாா். அப்போது, முதல்வா் ரங்கசாமி, மக்கள் சாா்பில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தேவை என்ற கோரிக்கை வைத்தாா். ஆனால், நரேந்திர மோடி எந்தவித பதிலையும் தராமல் சென்றுள்ளாா்.

இரண்டாவது முறையாக கடந்த 3-ஆம் தேதி பிரதமா் மோடி புதுச்சேரிக்கு வருகை தந்து ‘ரோடு ஷோவில்’ பங்கேற்றாா். அப்போதும் எந்தவிதமான வாக்குறுதியும் தராமல் சென்றாா். அவரோடு இருந்த முதல்வரும் இதுகுறித்து எதுவும் கூறவில்லை.

அதனால், மாநில அந்தஸ்து குறித்து ரங்கசாமி தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்றாா்.

காங்கிரஸ் மாநிலத் தலைவா் வெ. வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி, கா்நாடக சுகாதாரத் துறை அமைச்சா் தினேஷ் குண்டு ராவ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.