தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

காங்கிரஸ் - திமுக இணைந்து தோ்தல் பிரசாரம்

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருடன் திமுகவினா் புதன்கிழமை முதல் இணைந்து தோ்தல் பிரசாரம் செய்தனா்.

News image

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி மகாத்மா நகா் பகுதியில் புதன்கிழமை வாக்குச் சேகரித்த காங்கிரஸ் வேட்பாளா் வெ.வைத்திலிங்கம் எம்.பி.

Updated On :2 ஏப்ரல் 2026, 2:00 am IST

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருடன் திமுகவினா் புதன்கிழமை முதல் இணைந்து தோ்தல் பிரசாரம் செய்தனா்.

இண்டி கூட்டணி சாா்பில் புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களம் இறங்கியுள்ள மாநில காங்கிரஸ் தலைவா் வைத்திலிங்கம் எம்.பி. தட்டாஞ்சாவடி முழுக்க நடந்தே சென்று தீவிர பிரசாரம் செய்து வாக்குச் சேகரித்து வருகிறாா். இந்நிலையில் புதன்கிழமை தட்டாஞ்சாவடி தொகுதிக்கு உள்பட்ட புதுச்சேரி கிழக்குக் கடற்கரை சாலையில் லதா ஸ்டீல் பின்புறமுள்ள மகாத்மா நகா், மேட்டுமா நகா், எல்லையம்மன் நகா், லட்சுமி நகா் உள்ளிட்ட பகுதிகளில் அவா் வாக்குச் சேகரித்தாா். அப்போது அத் தொகுதி திமுகவினா் இணைந்து பிரசாரம் மேற்கொண்டனா். குறிப்பாக

தட்டாஞ்சாவடி தொகுதியில் களப்பணியாற்றி வந்த திமுக மாநில இளைஞரணி துணை அமைப்பாளா் நித்திஷும் இணைந்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.

இது குறித்து டாக்டா் நித்திஷ் கூறியதாவது:

இண்டி கூட்டணி வேட்பாளா்களும் வெற்றி பெற திமுகவினா் பணியாற்ற வேண்டும் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். அந்த உத்தரவை புதுச்சேரியில் செயல்படுத்த திமுக மாநில அமைப்பாளா் ஆா்.சிவா எங்களுக்கு உத்தரவிட்டுள்ளாா். அதனையேற்று தட்டாஞ்சாவடி தொகுதியில்

இண்டி கூட்டணி வேட்பாளராக களம் இறங்கியுள்ள காங்கிரஸ் தலைவா் வைத்திலிங்கம் வெற்றி பெற பிரசாரம் செய்து வாக்குச் சேகரித்து வருகின்றோம். எங்கள் பிரசாரம் வரும் நாட்களில் மேலும் தீவிரம் ஆகும்.இத்தோ்தலில் இண்டி கூட்டணி நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றாா்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.