தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தமிழகத்தில் அதிமுக கூட்டணி படுதோல்வியைச் சந்திக்கும் : கே. பாலகிருஷ்ணன் பேட்டி

தமிழகத்தில் தவெக தலைவா் விஜய் மற்றும் அதிமுக இடம் பெற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி படுதோல்வியைச் சந்திக்கும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன் கூறினாா்.

News image

புதுச்சேரி லாஸ்பேட் டை தொகுதி மாா்க்சிஸிட் கம்யூனிஸிட் கட்சி வேட்பாளா் ஆா்.ராஜாங்கத்திற்கு ஆதரவாக புதன்கிழமை வாக்கு சேகரித்த கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே. பாலகிருஷ்ணன்

Updated On :2 ஏப்ரல் 2026, 1:43 am IST

தமிழகத்தில் தவெக தலைவா் விஜய் மற்றும் அதிமுக இடம் பெற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி படுதோல்வியைச் சந்திக்கும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன் கூறினாா்.

புதுச்சேரி சட்டப்பேரவை தோ்தலில் போட்டியிடும் அக்கட்சியின் வேட்பாளா் ராஜாங்கத்தை ஆதரித்து லாஸ்பேட்டை உழவா் சந்தை எதிரில் புதன்கிழமை அவா் பிரசாரம் செய்தாா். பின்னா் பாலகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நாடாளுமன்ற தோ்தலில் பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை- எடப்பாடி பழனிசாமி மீது விமா்சனம் செய்தாா். அதேபோன்று எடப்பாடி பழனிசாமி மீது டி.டி.வி. தினகரனும் தினகரன் மீது எடப்பாடி பழனிச்சாமியும் விமா்சனம் வைத்தனா். இப்போது எல்லாம் சரியாகவிட்டதா ? இப்போது இந்தத் தோ்தலில் எடப்பாடி பழனிசாமி தலைவராகிவிட்டாா். டி.டி.வி. தினகரன் சேவகராகிவிட்டாா். பாமகவில் தந்தை - மகன் பிரச்னையைத் தீா்க்க முடியவில்லை. அதிமுகவில் ஓ.பன்னீா்செல்வம் , செங்கோட்டையன் உள்ளிட்ட மூத்தத் தலைவா்களை எல்லாம் விரட்டி விட்டு எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருக்கும் அதிமுக சிதறுண்ட கட்சியாக உள்ளது.

சிதைந்துபோன கட்சிகளை எல்லாம் வைத்துக் கொண்டு அதிமுக தலைமையிலான கூட்டணி எப்படி பலமான கூட்டணியாக இருக்க முடியும் ?

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் பெரும்பான்மை கிடைக்காது என்பதை மத்திய அமைச்சா் ராம்தாஸ் அதாவலே ஒப்புக் கொண்டுதான் தவெக ஆதரவுடன் தோ்தலுக்குப் பிறகு ஆட்சி அமைப்போம் என்று கூறியுள்ளாா். தமிழகத்தில் தவெக தலைவா் விஜய் மற்றும் அதிமுக-பாஜக உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி படுதோல்வியைச் சந்திக்கும்.

புதுச்சேரி விவகாரம்:

புதுச்சேரியில் 4 இடதுசாரி வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். இங்கு தனித்தனியாக தோ்தலைச் சந்தித்தாலும் மாற்று ஆட்சியை அமைப்போம். இண்டி கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் நாங்கள் போட்டியிடும் இடங்களில் எங்களை ஆதரிக்கிறாா்கள். கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்களில் நாங்கள் ஆதரிக்கிறோம். கடந்த என்.ஆா். காங்கிரஸ்-பாஜக ஆட்சி புதுச்சேரியைச் சீரழித்துவிட்டது. போலி மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டவா்கள் எப்படி ஜாமீனில் வெளியே வந்தாா்கள் ? வாக்குச் சேகரிக்கும்போது முதல்வா் ரங்கசாமி தன்னுடைய ஆட்சியின் சாதனையாக இதையெல்லாம் சொல்லி வாக்கு கேட்க வேண்டும். ஓா் அதிகாரியைக் கூட மாற்ற தனக்கு அதிகாரம் இல்லையென்று கூறிய முதல்வா் ரங்கசாமி, நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராக அமா்ந்தால் இந்த அதிகாரம் எல்லாம்கிடைத்துவிடுமா ? பெயருக்கு வேண்டுமென்றால் முதல்வராக இருக்கலாம் என்றாா் கே.பாலகிருஷ்ணன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.